இஸ்லாம் என்றால் என்ன? (what is Islam?)

நாம் அனைவரும் அறிந்த ஒன்றே, ஒரு குடும்பம் நல்ல முறையில் செயல்படுவதற்கு ஒரு நல்ல தலைமை, அதேபோல ஒரு நகரத்தின் நல்ல வளர்ச்சிக்கு அதன் சிறந்த தலைமை அவசியமான தொன்றகும். நாம் நன்றாக அறிய முடியும் இந்த அண்டத்தில் எதுவும் தானாக நடப்பதில்லை. மேலும் நம் அண்டத்தில் இருக்கின்ற பூமியாகட்டும் மற்ற கோள்கலாகட்டும் இவையனைத்தும் பல ஆயிரம் கோடி வருடங்களாக ஒரு குறிப்பிட்ட கட்டளைகளுடன், ஒரு சீரான செயல்பாட்டுடன் இயங்குவதை நம்மால் உணரமுடியும். நம்மால் அழைக்க முடியுமா இவையாவும் தானாக நேர்ந்த ஒரு விபத்து என்று? அல்லது மனிதனால் அவற்றின் செயல்பாடுகளைத்தான் நிர்ணயிக்க முடியுமா?.

இந்த அண்டத்தை ஒப்பிடுகையில் மனிதன் என்பவன் ஒரு சிறிய பகுதியைத்தான் பெற்றிருக்கிறான். எனவே அண்டங்களும், மனிதனும் மற்ற உயிரினங்களும் ஒரு மிகப்பெரிய சக்தியின் கீழ் செயல்படுகின்றன. அந்த ஒரு மிகப்பெரிய சக்திதான் இந்த பூமியையும் மற்றும் பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலையும் ஏற்படுத்திய படைப்பாளன் ஆகும். அந்த சக்திவாய்ந்த படைப்பாளனை தான் மனிதர்கள் கடவுள் “அல்லாஹ்” என்று அழைக்கிறார்கள்.

அவன் எத்தகையவன் என்றால் அவன் மனிதன் இல்லை ஏனென்றால் மனிதனால் மற்ற மனிதனையோ விலங்கையோ படைக்க முடியாது. அவன் விளங்கும் அல்ல தாவர இனமும் அல்ல. அவனுக்கு உருவம் உண்டு; ஆனால் அவனுக்கு உருவச்சிலைகள் கிடையாது. எனவே யாவற்றையும் படைத்த இறைவன். அவன் படைத்த யாவற்றையும் விட தனித்தவன்.

இறைவனை பற்றி அறிந்து கொள்வதற்கு பல வழிகள் உண்டு. நமக்கு இறைவன் வழங்கிய அருட்கொடையிலிருந்து அவனை நம்மால் உணர்ந்துகொள்ள முடியும். இறைவன் மனிதனை நெறிப் படுத்துவதக்காகவும் வாழ்வியல் நெறிமுறையை விளக்குவதற்காகவும் தூதுவர்களையும் இறைவேதத்தையும் இறக்கி வைத்துள்ளான். இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறை தூதர்களின் வாழ்க்கை முறையின் மூலமும் இறை வேதத்தின் மூலமும் நாம் இறைவனைப்பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இஸ்லாம் என்பது இறைவன் தன் கடைசி இறைதூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு எவற்றை வழங்கி கற்றுக் கொடுத்தானோ அவற்றை முழுமையாக ஏற்று இறைவனுக்கு கீழ்படிந்து நடப்பதாகும். இஸ்லாம் என்பதன் தமிழ் பொருள் ‘கீழ்படிதல்’ ‘சரணடைதல்’ என்பதாகும். இஸ்லாம் என்பது ஓரிறை கொள்கை ஆதலால் நாம் வாழும் வாழ்க்கை முறையை அர்த்தமுள்ளதாகவும் மற்றும் மூடபழக்க வழக்கங்களில் இருந்து விலகி இறைவனைச் சார்ந்த மார்க்கமாகவும் இஸ்லாம் திகழ்கிறது. இஸ்லாம் ஓரிறை கொள்கையை வலியுறுத்துவதால் உலகில் உள்ள அனைவரையும் ஓர் இறைவனின் கீழ் கொண்டுவருகிறது. இது ஒரு மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையேவுள்ள உறவினை நெருக்கமாக்குகிறது எனவே மனிதன் தான் செய்த நட்பலனுக்கு ஏற்றவாறு கூலி கொடுக்க படுகிறான்.

இஸ்லாம் என்பது புதிய மார்க்கம் அல்ல மாறாக இதே போன்ற இறைவனின் கட்டளைகள் முன் சென்ற நபிமார்களுக்கும் சொல்லபட்டிருக்கிறது. ஆதம்(அலை) , நுஹ்(அலை), இப்ராகிம்(அலை),இஸ்மாயில்(அலை), தாவூத்(அலை), மூசா(அலை) மற்றும் ஈசா(அலை). ஆனால் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு வழங்கிய திருமறை திருக்குரான் இஸ்லாத்திக்கு ஒரு முழு வடிவம் தருவதாகவும் இதற்கு முன் சென்ற நபிமார்களின் வாழ்க்கையை உறுதி செய்வதாகவும் இருக்கிறது.

இஸ்லாம் இரண்டு அடிப்படை மூலாதாரங்களை மட்டும் கொண்டு அமைய்ந்தது.
1. அல்லாஹ்வின் வேதம். (அல் குர்ஆன்)
2. அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் மார்க்கம் என்ற ரீதியில் அமுல்படுத்தியவைகள்.

திருகுர்ஆன் இறைவனால் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறக்கி அருளப் பற்ற வேதமாகும். மற்றும் இது இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கு மூலதனமாகவும் திகழ்கிறது. அருள்மறையாம் திருமறை திருக்குர்ஆன் இறை நம்பிக்கையின் ஆதாரமாகவும், நன்மை தீமைகளை பிரித்து அறிவதக்கும், மனிதனின் தோற்றத்தையும், இறை வழிபாடுகளையும், அறிவை வழங்கும் பெட்டகமாகவும், கருணையின் வடிவாகவும், மனிதன் இறைவன் தொடர்பை விளக்கு வதாகவும், மனிதனின் கடமையை விளக்கி கூறுவதாகவும் திருக்குரான் விளங்குகிறது. அது மற்றுமின்றி சமூகம், அரசியல், பொருளாதாரம், நீதி துறை ஆகியவற்றை தெளிவாக விளக்குவதாகவும் திருக்குர்ஆன் விளங்குகிறது. இஸ்லாத்தின் இதுவே முதலாவது சட்ட மூலாதாரமாக அமையும்.

ஹதீத் என்பது முஹம்மது (ஸல்) அவர்களினால் கற்றுதரபட்டதும், அவர்களின் செயல் முறைகளையும் மற்றும் திருக்குரான் வசனங்களின் விளக்கங்களையும் உள்ளடக்கியதாகும். இதன் தொகுப்புகள் அன்றைய சகாபாகளின் (நபிதோழர்கள்) மூலம் பெறப்பட்டதாகும். நபிகளாரின் சொல் செயல் அங்கீகாரம் ஆகியவையே சுன்னா என்ற இஸ்லாத்தின் இரண்டாவது சட்ட மூலாதாரமாக அமையும்.

இரண்டைப் பின்பற்றுவீர்!
மக்களே! சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்; எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரசாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தையும் அவனது தூதரின் வழிமுறையும் விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்!

(ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074) (முஅத்தா இமாம் மாலிக்/மிஷ்காத்182. ஸஹீஹுத் தர்கீப் 40.)

Comments (1) »

நாமே நமது பிள்ளைகளுக்கும், உறவினர்களூக்கும் உபதேசம் செய்வோம்!

அஸ்ஸலாமு அலைகும் (வறஹ்)

“முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர், அல்லாஹ் அவர்களை ஏவி எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள், தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்.” (அல்குர்ஆன் 66:06)

தன்னுடைய மகனுக்கு மகளுக்கு ஒரு வயதில் என்ன உணவு கொடுக்க வேண்டும் என்பதிலிருந்து அவர்களின் வருங்கால வாழ்க்கை எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்பது வரை தீர்மானித்து வைத்து இருக்கின்றனர். அவர்கள் எந்தத் துறையில் ஆர்வமாய் இருக்கின்றார்களோ அவற்றில் அவர்களின் ஆர்வத்தை தூண்டிவிடுகின்றனர். தன் மகன் மகள் இலட்சியத்தை அடையும்வரை போராடுகின்றனர்

ஆனால் தன் மகன் மகள் உற்றார் உறவினர்கள் ஒரே இறைவனை வணங்காமல் இறைவனின் ஏவல் விலக்கல்களை ஏற்காமல் வாழ்கின்றார்களே அவர்களை நேர்வழியில் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறோமா? இல்லை அவர்கள் செய்யும் அனாச்சாரங்களை விட்டாவது விலகி இருக்கின்றோமா?

“உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளரும், பாதுகாவலரும் ஆவார். உங்களில் ஒவ்வொருவரும் அவரது கண்காணிப்பின் பொறுப்பின் கீழ் உள்ளவர்களைப் பற்றி கேட்கப்படுவார்.” (அறிவிப்பாளர்: இப்னுஉமர் நூல்: புகாரி, முஸ்லிம்)

பொறுப்பாளர்கள் தம் பிள்ளைகள் பரிட்சையில் மதிப்பெண் குறைத்து வாங்கிவிட்டால் உடனே கோபப்பட்டு அடிக்கின்றீர்கள். ஆனால் தன் பிள்ளைகள் 10 வயது அடைந்த பிறகும் தொழாமல் இருப்பதற்கு எத்தனை பொறுப்பாளர்கள் உங்களது பிள்ளைகளை அடித்தீர்கள் என்று நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள். லுக்மான் அலைஹிஸ்ஸலாம் உபதேசம் செய்ததைப் பாருங்கள்.

“(லுக்மான் தம் புதல்வரிடம்) என் அருமை மகனே! (நன்மையோ, தீமையோ) அது ஒரு கடுகின் சித்து அளவே எடையுள்ளது ஆயினும்; அது கற்பாறைக்குள் இருந்தாலும் அல்லது வானங்களில் இருந்தாலும், அல்லது பூமிக்குள்ளே இருந்தாலும் அல்லாஹ் அதையும் (வெளியே) கொண்டு வருவான்; நிச்சயமாக அல்லாஹ் நுண்ணறிவு மிக்கவன்; (ஒவ்வொன்றின் அந்தரங்கத்தையும்) நன்கறிபவன்.” (அல்குர்ஆன் 31:16)

“அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் தன் சகோதரனை விட்டும் – தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்; தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும் அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.” (அல்குர்ஆன் 80:34-37)

ஆகவே நமது பிள்ளைகளுக்கும், உறவினர்களூக்கும் உபதேசம் செய்து வாழ அல்லாஹ் கிருபை செய்வானாக!

நன்றியுடன்…
சகோதரர் சில்மி
கட்டார் கிளை – தாருல் அதர் அத்த அவிய்யா

Leave a comment »

கல்முனைக்குடி கடற்கரைப் பள்ளி கொடியேற்றமும்! ஈமானை இழக்கும் முஸ்லிம்களும்!!!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

கல்முனைக்குடி கடற்கரைப் பள்ளி கொடியேற்றமும்! ஈமானை இழக்கும் முஸ்லிம் சகோதர சகோதரிகளும்! அன்புக்குரிய இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுழ்ழாஹி வபறகாதுஹு

இஸ்லாமிய மார்க்கம் பாவச் செயல்களில் மிகப் பெரிய பாவமாகக் கருதுவது இறைவனுக்கு இணை கற்பிப்பதாகும். இப்பாவம் இஸ்லாத்தின் பார்வையில் மிகக் கொடியதாகும். ஒருவர் ஒரு மனிதனை வணங்குவதோ அல்லது அந்த மனிதனிடம் கடவுள் தன்மை உள்ளது என்று நம்புவதோ, அவர் மரணித்த பின் அவரது மண்ணறையை புனிதமாகக் கருதுவதோ, அதை கட்டி வைத்துக் கொண்டு சுற்றி வருவதோ, அக்கல்லறையை தொட்டு முகர்வதோ, எண்ணெய் தடவுவதோ, அவரிடத்தில் தமது தேவையை நிறைவேற்றித் தருமாறு பிரார்த்திப்பதோ, அவருக்காக அறுத்துப் பலியிடுவதோ, அவருக்காக நேர்ச்சை வைப்பதோ, அவரின் பேரில் சத்தியம் செய்வதோ அக்கல்லறையை நோக்கி நேர்சை செய்து பிரயானம் செய்வதோ இணை வைத்தல் எனும் கொடிய பாவத்தைச் சேர்ந்தவைகளாகும் என இஸ்லாம் குறிப்பிடுகின்றது. இணை வைத்தல் பற்றி அல்குர்ஆனில்

மன்னிக்கப்படாத குற்றம்:-
இறைவன் அல்குர்ஆனில் இணை வைத்தல் எனும் பாவத்தைத் தவிர உள்ள பாவங்களை தாம் நாடியவர்களுக்கு (மறுமையில்) மன்னிப்பபதாகக் குறிப்பிடுகின்றான்.

‘நிச்சயமாக அழ்ழாஹ் தனக்கு இணை வைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதனைத்தவிர (மற்ற)எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான். எவர் அழ்ழாஹ்வுக்கு இணை வைக்கின்றாரோ அவர் திட்டமாக மகத்தான பாவத்தை பொய்யாக கற்பனை செய்துவிட்டார்.’(அல்குர்ஆன் 4:48)

‘நிச்சயமாக அழ்ழாஹ் தனக்கு இணை வைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதனைத்தவிர (மற்ற)எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான். எவர் அழ்ழாஹ்வுக்கு இணை வைக்கின்றாரோ அவர் திட்டமாக வெகு தூரமான வழி கேடாக வழிகெட்டுவிட்டார்.’ (அல்குர்ஆன் 4:116)

ஏற்கனவே செய்த நன்மைகளை அழித்துவிடக் கூடிய கொடிய பாவம்:-
‘இன்னும் அவர்கள் (அழ்ழாஹ்வுக்கு இணை வைத்திருந்தால்) அவர்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான)யாவும் அவர்களை விட்டு அழிந்து விடும்.’ (அல்குர்ஆன் 6:88) மற்றுமோர் இடத்தில் ‘(நபியே)நீர் இணை வைத்தால் நிச்சயமாக உம்முடைய செயல்(கள் யாவும்) அழிந்து விடும்.’ (அல்குர்ஆன் 39:65)

சுவர்க்கம் செல்வதை ஹராமாக்கும் பாவம்:-
‘நிச்சயமாக எவர் அழ்ழாஹ்வுக்கு இணை வைக்கின்றாரோ அவர் மீது திட்டமாக அழ்ழாஹ் சுவனபதியை தடுத்து விடுகின்றான். மேலும் அவர் தங்குமிடம் நரகம்தான்.’ (அல்குர்ஆன் 5:72)

வானத்திலிந்து விழுந்தவனைப் போன்றவன்:-
‘அழ்ழாஹ்வுக்கு அர்ப்பணித்து, அவனுக்கு இணை கற்பிக்காதோராக (ஆகுங்கள்!) அழ்ழாஹ்வுக்கு இணை கற்பிப்பவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் தூக்கிச் சென்றவனைப் போல், அல்லது காற்று தூரமான இடத்தில் கொண்டு போய்ப் போட்டவனைப் போல் ஆவான்.’ (அல்குர்ஆன் 22:31)

மேற்கூறப்பட்ட செய்திகளின் அடிப்படையில் ஒரு இறை விசுவாசி இப்பாவத்தின் சாயல் படுவதையே விரும்ப மாட்டான் விரும்பவும் கூடாது என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஒரு இறை விசுவாசியைப் பொறுத்தவரை இவ்வாறான அம்சங்களைச் செய்வதோ அல்லது இவ்வாறான நிகழ்வுகளில் பங்குபற்றுவதோ அவனுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல என்பதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.
கல்முனைக்குடி கடற்கரை பள்ளிவாயலைப் பொறுத்தவரை இஸ்லாத்தின் பார்வையில் பள்ளிவாயல் என்ற தகுதியை இழந்த ஓர் இடமாகவே கணிக்கப்படும். காரணம் பள்ளிவாயல்களில் இறைவன் மாத்திரம்;தான் வணங்கப்பட வேண்டும், அழைக்கப்பட வேண்டும், பள்ளிவாயலினுள் சாமாதிகள் இருக்கக் கூடாது. கல்முனைக்குடி கடற்கரை மசூதியில் சமாதி வழிபாடு நடைபெறுகிறது, அழ்ழாஹ் அல்லாதவர்கள் அழைக்கப்பட்டு அவர்களிடம் தமது தேவையை மக்கள் கேட்கின்றனர் ஷிர்குகள் நிறைந்த பாடல்கள் பாடப்படுகின்றன, ராதிபுக்கள் நடைபெறுகின்றன, இசை கலந்த பாடல்கள் ஒலிக்கப்படுகின்றது, ஆண் பெண் கலப்புக்கள், அநாச்சாரங்கள், கலாசார சீர்கேடுகள் ஆகியன இடம்பெறுகிறன. மொத்தத்தில் அநாச்சாரங்களின் முழு வடிவமாக இவ்விடம் இருப்பதைக் காணலாம். அழ்ழாஹ்வின் மார்க்கம் பரிகசிக்கப்படுகின்ற, கேவலப்படுத்தப்படுகின்ற, குழிதோண்டிப் புதைக்கப்படகின்ற இவ்வாறான இடங்களுக்கு முஸ்லிம்கள் செல்வது மாற்று மதத்தவர்கள் தமது வணக்கஸ்தலங்களில் நடாத்தும் ஆராதனைகளை ஆதரித்து கோவில் விழாக்களுக்கு செல்வதற்கு சமமானது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இவ்வாறான இடங்களுக்கு செல்வது, மார்க்க ரீதியில் குற்றமாகும். இவ்வாறான இடங்களை நோக்கி பிரயாணம் செய்யும் வேளையில் மரணம் வந்துவிட்டால் அது கெட்ட முடிவுக்குரிய அடையாளமாகும்.

இறைவன் திருமறைக் குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.
‘அழ்ழாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான. நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அழ்ழாஹ் ஒன்று சேர்ப்பான்.’ (அல்குர்ஆன் 4:140)

இவ்வசனத்தில் அழ்ழாஹ்வினுடைய மார்க்கம் நிராகரிக்கப்பட்டு பரிகாசிக்கப்படுவதை ஒரு சபையில் இருந்து மௌனமாக கேட்டுக் கொண்டிருப்பதையே அழ்ழாஹ் எச்சரிக்கையாக குறிப்பிடுவதைக் காணலாம். ஆனால், இன்று இஸ்லாமிய சகோதர சகோதரிகள் இதனுடைய விபரீதம் புரியாமல் இவ்வாறான இடங்களுக்கு புறப்பட்டுச் செல்கின்றனர். அழ்ழாஹ்வின் சாபத்தை பெற்றுத் தரக்கூடிய இந்நிகழ்வுகளில் ஓர் உண்மை விசுவாசி கலந்துகொள்ளக் கூடாது. ஷைத்தானுக்கு வழிப்பட்டவர்கள் இவ்வாறான போதனைகளை புறக்கணித்து விட்டு கலந்து கொள்ளச் சென்றால் இவர்களுக்கு எவ்வகையிலும் உதவியாக இருந்து விடவும் கூடாது. மாற்று மதத்தவர்கள் தமது ஆராதனைகளின் வடிவங்களாக தேர்த் திருவிழா என்றும், சந்தனக் கூடு என்றும், கொடி மரம் கொடியேற்றம் என்றும், அன்னதானம் என்றும் தமது தெய்வங்களை ஆராதனை செய்வதற்கு நிகராக நாமும் சளைத்தவர்கள் அல்லர் என்ற அமைப்பில் சமாதி வழிபாட்டில் இன்றய முஸ்லிம்களில் ஒரு சாரார் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது செயற்பாடுகளுக்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித சம்மந்தமும் கிடையாது என்பதை மார்க்கத்தின் பெயரால் கூறிக் கொள்கின்றோம்.

பொழுது போக்கிற்காக சென்று வரலாமா?:-
மார்க்க விரோத செயற்பாடுகள் நடைபெறாத பள்ளிவாயல்களுக்கே விஷேடமாக பயணம் செய்து தரிசிப்பதை இஸ்லாம் விலக்கியிருக்கின்றது. ஆனால் பல பாவங்களின் மையமாகவுள்ள மேற்படி இடத்திற்கு தின்பண்டங்கள், பொருட்கள் வாங்கச் சென்றாலும் ஏதோ ஒரு வகையில் நாம் அதற்கு வழங்கும் மௌன அங்கீகாரமாகவே அது அமையும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘மஸ்ஜிதுல், மஸ்ஜதுந் நபவ், மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாயல்களைத் தவிர வேறெந்தப் பள்ளிவாசலுக்கும் (அதிக நன்மையை எதிர்பார்த்து)ப் பயணம் மேற்கொள்ளப்படாது.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: புஹாரி-1189)

இறைவன் திருமறைக் குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.:-
‘(ஏக இறைவனை) மறுப்பவர்களே! நீங்கள் வணங்குவதை நான் வணங்கமாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. நீங்கள் வணங்குவதை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்கு என (முஹம்மதே!) கூறுவீராக!’ (அல்குர்ஆன் 109:1-6)

இவ்வசனத்தில் மிகத் தெளிவாக இறைவன் இறை மறுப்பாளர்கள் வணங்குவதை முஸ்லிம்களாகிய நாம் வணங்கக் கூடாது எனக் கூறியிருப்பதைக் காணலாம். மேலும்
அழ்ழாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள். ‘யார் எந்தச் சமுதாயத்திற்கு ஒப்பாகிறாரோ அவர் அவர்களைச் சார்ந்தவரே.’ (அறிவிப்பவர்: இப்னு உமர், நூல்: அபூதாவூத்).

இந்த செய்தியில் பிற மதத்தவருடைய கலாசாரத்திற்கு ஒப்பாகுவதை நபியவர்கள் தெளிவாக தடுத்திருப்பதைக் காணலாம்.

அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளே!
அநாச்சாரத்தின் முழு வடிவமாகத் திகழும் கல்முனை கடற்கரை பள்ளி கொடியேற்றமும் அதையொட்டிய இன்னும் பல நிகழ்வுகளும் இஸ்லாத்தின் பார்வையில் கொடிய பாவச் செயல்கள் என தெரிந்ததன் பிறகும் இதில் கலந்த கொள்ள முயற்சிப்பது ஒரு உண்மை விசுவாசிக்கு உகந்ததல்ல. ஒரு கணவன் தனது அன்பு மனைவி விரும்புகிறாளே என்பதற்காக அவளது குறித்த இவ்வாசைக்கு கட்டுப்படுவதோ ஒரு மனைவி தனது அன்புக் கணவன் விரும்புகிறாரே என்பதற்காக இவ்வாசைக்கு கட்டுப்படுவதோ அல்லது தனது அன்புக் குழந்தைகள் விரும்புகின்றனர் என்பதற்காக அல்லது தனது பாசத்துக்குறிய தாய் தந்தையர்கள் விரும்புகின்றனர் என்பதற்காக அல்லது தனது உறவினர்கள், அயல் வீட்டுக்காரர்கள் விரும்புகின்றனர் என்பதற்காக அழ்ழாஹ் கடுமையாக வெறுக்கின்ற கோபிக்கின்ற இவ்வாறான நிகழ்வுகளுக்கு செல்வதற்கு உதவியாக இருக்கக் கூடாது.

அழ்ழாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்.
‘மற்றவர்களிடம் அழ்ழாஹ்வுக்கு மாறு செய்வதில் கீழ்படிதல் கிடையாது. கீழ்ப்படிதல் என்பதெல்லாம் நன்மையில்தான் என்று சொன்னார்கள்.’ (அறிவிப்பவர்: அலி (ரழி), நூல்: புஹாரி-7257).

மற்றவர்கள தன்னை தவறாக நினைத்து விடுவார்கள் என்றோ அல்லது அவர்களது அன்பு தனக்கு இல்லாமல் போய் விடுமென்றோ அற்ப சொற்ப உலக ஆதாயத்திற்காக அழ்ழாஹ்வின் மார்க்கத்தில் கைவைக்கக் கூடாது.
‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இருளான இரவின் துண்டுகளைப் போன்று அடுக்கடுக்கான குழப்பங்கள் வருவதற்கு முன் நன்மைகளை அவசரப் படுத்துங்கள். (அந்நேரத்தில்) காலையில் முஃமினாக இருந்தவன் மாலையில் நிராகரிப்பவனாக மாறிவிடுவான். மாலை நேரத்தில் முஃமினாக இருந்தவன் காலையில் நிராகரிப்பவனாக மாறிவிடுவான். தனது மார்க்கத்தை அற்ப உலக நோக்கத்திற்காக விற்றுவிடுவான்.’ (நூல்: முஸ்லிம்)

‘நீங்கள் நலவுக்கும், இறையச்சத்திற்கும் பரஸ்பரம் உதவியாக இருங்கள். பாவத்திற்கும் எல்லை கடந்து செல்வதற்கும் துணையாக இருக்காதீர்கள்.’ (அல்குர்ஆன் 5:2)

இப்படிக்கு.
தாருல் அதர் அத்தஅவிய்யா
(மத்ஹபுகள் சாராத அல்குர்ஆன் அஸ்ஸுன்னா அடிப்படையிலான பிரச்சார அமைப்பு)
த.பெ. இல 19, கப்பல் ஆலிம் வீதி, புதிய காத்தான்குடி 02.
Tele: +94 652247900
http://www.dharulathar.com

Leave a comment »

ஷைத்தானுடைய அடிச்சுவட்டைக் கூட பின்பற்றாதீர்கள்…

ஒரு நாள் இரவு நான் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் பொழுது பஜ்ர் தொழுகைக்கானபாங்கொலி கேட்டது. பள்ளிக்குச் சென்று ஜமாத்தோடு தொழ வேண்டும் என்ற எண்ணத்தில்எழ முற்பட்டேன். அப்பொழுது ஷைத்தான் அங்கு வந்தவனாக ”விடிவதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. ஒரு குட்டித்தூக்கம் போடு” என்றான்.

”தூங்கினால் ஜமாத்தோடு தொழமுடியாமல் போய்விடுமே” என்றேன். அதற்கு ஷைத்தான் ”நான் அதை மறுக்கவில்லை. பகல் முழுவதும் நீ வெயிலில் கஷ்டப்பட்டு உழைத்து களைத்துப்போய் இருக்கிறாய். இந்த இமாமிற்கு என்ன வேலை? நிழலில், பள்ளியின் உள்ளே அமர்ந்துகொண்டு எந்த வேலையும் செய்யாமல் இருக்கிறார். தொழ மறந்தால் வீட்டில் தனியாகதொழ அனுமதி இருக்கிறதே! உன்னை வருத்திக் கொள்ளாதே! இஸ்லாமிய மார்க்கம் இலேசானது. அதை கடினமாக்கி விடாதே!” என்றான்.

அவன் பேச்சில் மயங்கி உறங்கிவிட்டேன். சூரியன் உதயமாகி நன்கு வெளிச்சம் பரவிய பின்பே விழித்தேன். அப்பொழுது ஷைத்தான் எதிரில் வந்து ”வருத்தப்படாதே! நன்மை சம்பாதிக்க பல வழிகள் இருக்கிறது” என்றான். நான் தௌபா செய்ய நாடினேன். உடனே ஷைத்தான் ”உன் இளமைப் பருவம் முடியுமுன் அதை முழுமையாக அனுபவி” என்றான்.

நான் ”மரணம் வந்து விடுமே என அஞ்சுகிறேன்” என்றேன்.

அதற்கவன் ”பைத்தியம் மாதிரி பேசாதே. உன் வாழ்வு இப்பொழுது முடிவடையாது” என்றான்.

நான் அல்லாஹ்வின் ஞாபகத்தில் (திக்ர்) ஆழ்ந்தேன். உடனே அவன் என் உள்ளத்தில் உலகத்தின் பல்வேறு இன்பங்களைப் பற்றிய எண்ணங்களை விதைத்தான்.
”நான் அல்லாஹ்விடம் துஆ செய்வதை நீ தடுக்கிறாய்” என்றேன். ”இல்லை, இல்லை. நீ இரவு படுக்குமுன் துஆ செய்யலாமே” என்றான்.

”நான் உம்ரா செல்ல நாடியுள்ளேன்” என்றேன்.

”நல்லது. ஆனால், சுன்னத்தை விட ஃபர்ளுதானே முக்கியம். நீ உம்ரா செல்லாதே, ஹஜ் செல்ல முயற்சி செய்” என்றான்.

நான் குர்ஆன் ஓத முற்பட்டேன். உடனே அவன் ”நீ ஏன் பாடல், கவிதைகளை பாடி உன்னை சோர்விலிருந்து விடுவிக்க மறுக்கிறாய்?” என்றான். நான் ”பாடல் பாடி கூப்பாடு போடுவது ஹராம்” என்றேன்.

உடனே அவன் ”மார்க்க மேதைகளிடையே இசை, பாடல்குறித்து கருத்து வேற்றுமை உள்ளது” என்றான். ”இசையை ஹராம் என்று கூறும் ஹதீஸ்களை நான் படித்துள்ளேன்” என்றேன். உடனே அவன் ”அந்த ஹதீஸ்களின் அறிவிப்பாளர்கள் வரிசை பலஹீனமானது” என்றான்.

அந்த சமயத்தில் ஒரு அழகிய இளமங்கை என்னை கடந்து சென்றாள். நான் என் பார்வையை வேறுபுறம் திருப்பிக் கொண்டேன். உடனே அவன் ”என்ன வெட்கப்படுகிறாய்? முதல் பார்வை தான் அனுமதிக்கப்பட்டுள்ளதே!” என்றான். ”அந்நியப் பெண்ணை பார்ப்பது நரகில் தள்ளிவிடும் என அஞ்சுகிறேன்” என்றேன். அவன் சிரித்து விட்டு ”இயற்கை அழகை கலைக்கண்ணோடு ரசிப்பது அனுமதிக்கட்டதுதான்” என்றான்.

”நான் தாவா-அழைப்புப்பணி செய்ய நாடியுள்ளேன்” என்றேன். உடனே அவன், ”ஏன் நீ தர்மசங்கடமான சூழ்நிலையில் சிக்க விரும்புகிறாய்?” என்றான்.

”என் நோக்கம் இஸ்லாத்தை பிறருக்கு எடுத்து இயம்புவது” என்றேன்.

உடனே அவன் ”இல்லை உன் நோக்கம் உன்னை எல்லோரும் பெரிய பேச்சாளன் எனப் பாராட்ட வேண்டும். இந்த பெருமை தான் உன் அனைத்து நன்மைகளையும் அழித்துவிடும். அதனால், தாவாவை விட்டு விட்டு உன் சொந்த வேலையை செய்!” என்றான்.

“நம்பிக்கை கொண்டோர்களே! நீங்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள். ஷைத்தானுடைய அடிச்சுவட்டைக் கூட பின்பற்றாதீர்கள். ஏனெனில், அவன் உங்களுக்கு பகிரங்க விரோதி ஆவான்.” (குர்ஆன் 02 : 208)

ஆகவே, இன்ஷா அல்லாஹ் நாம் அனைவரும் ஷைத்தானுடைய பாதையில் செல்வதிலிருந்து இறைவனிடம் பாதுகாவல் தேடுவோம். நம்முடைய மற்ற சகோதர, சகோதரிகளையும் அங்ஙனம் செயல்பட அறிவுறுத்துவோம்.

நன்றியுடன்…
சகோதரர் சில்மி
கட்டார் கிளை – தாருல் அதர் அத்த அவிய்யா.

Leave a comment »

இஹ்வான்களும் இல்லை! முஸ்லிம்களும் இல்லை!!!

அன்பர்கள் கவனத்திற்கு:
இக்கட்டுரை இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தைச் சார்ந்தவர்களது வரலாற்றுக் குறிப்புகள், சுய சரிதைகள், அரச ஆவனங்கள், பத்திரிகைச் செய்திகள், என்பவைகளை அடிப்படையாகக் கொண்டு எகிப்து நாட்டின் அரசியல் எழுத்தாளர் மாஹிர் தகி என்பவரால் எழுதப்பட்ட ஆக்கத்தை தழுவியதாகவே அமைக்கப் பட்டுள்ளது. இதில் இடம் பெறும் வரலாற்று உன்மைகள், நிகழ்வுகள் தொடர்பில் மறுப்புகள், மாற்றுக் கருத்துகள் இருப்பின் ஆக்கபூர்வமாகவும் ஆதாரபூர்வமாகவும் எமக்கு தெரியப்படுத்துமாறு வினயமாய் வேண்டிக் கொள்கிறோம்.

இஹ்வான்களும் இல்லை! முஸ்லிம்களும் இல்லை!!” என்ற வசனம் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தில் ஒரு பிரபல்யமான வார்த்தையாகும். இக்கூற்று யாரால் யாருக்கு எச்சந்தர்ப்பத்தில் கூறப்பட்டது என்பதை வரலாற்று ரீதியாக விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபத்தி எட்டாம் ஆண்டு மார்ச் மாதம் இருபத்தி மூன்றாம் திகதி (1928/03/23) எகிப்து நாட்டின் இஸ்மாஈலிய்யா நகரில் ஆங்கிலேய ராணுவத்தில் பனியாற்றிக் கொண்டிருந்த ஆறு நபர்கள் ஆரம்பப் பாடசாலையில் அறபு மொழி ஆசிரியராகக் கடமை புரிந்து கொண்டிருந்த ஹஸனுல் பன்னா அவர்களுடன் இணைந்து ஏழு பேருமாக தாங்கள் இஹ்வானுல் முஸ்லிமீன் எனும் அமைப்பைத் தொடங்கியுள்ளதாகவும் அதற்கு ஹஸனுல் பன்னா அவர்கள் “முர்ஷித்” வழிகாட்டும் தலைவராக இருப்பார் என்றும் பிரகடனம் செய்தார்கள். அப்போது ஹஸனுல் பன்னா அவர்களது வயது இருபத்தி இரண்டாக இருந்தது.

இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட இயக்கத்தை ஹஸனுல் பன்னா அவர்கள் மூன்று உட்கட்டமைப்பாக நிறுவியிருந்தார். அவைகளாவன:

1. ஆரம்பக் கட்டமைப்பு: இப்படித்தரத்தில் உள்ளவர்கள் இயக்கத்தின் போதனைகளை செவிமடுப்பார்கள். அவைகளுக்குக் கட்டுப்பட்டு நடந்துதான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.

2. போராடும் கட்டமைப்பு: இத்தரத்தில் உள்ளவர்கள் இயக்கத்தின் போதனைகளை, வழிகாட்டுதல்களை செயற்படுத்தும் பணியை செய்பவர்கள். (இயக்க) தலைமைத்துவத்துக்குக் கட்டுப்பட்டு நடப்பது இவர்களுக்குக் கட்டாயமாகும்.

3. அரசியல் கட்டமைப்பு: இச்சாரார் முஸ்லிம்களின் விவகாரங்களைப் பொறுப்பேற்று அவர்களை இஸ்லாமிய சட்டத்தின் படி நிர்வகிக்கக் கூடியவர்கள். இதன் இறுதி வடிவம் இஸ்லாமிய ஆட்சியை அமைப்பதாகும்.

இவ்வாறான உட்கட்டமைப்பைக் கொண்ட இயக்கம் கடும் உழைப்பினாலும் இஸ்லாத்தின் பெயரை இவர்கள் பயன்படுத்தியதனாலும் மிக வேகமாக இரண்டு வருட காலத்திற்குள் இஸ்மாஈலிய்யா நகரத்தில் இருந்து அதனை அன்டிய நகரங்களுக்கும் பரவி நான்கு வருடத்தில் எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் காரியாலயம் அமைத்து இயக்கத்தின் பேரில் வார சஞ்சிகை ஒன்றை வெளியிடும் அளவிற்கு வளர்ச்சி அடைந்தது. அத்துடன் சிரியா, லெபனான், சூடான், பலஸ்தீன் ஆகிய வெளி நாடுகளிலும் கிளைகள் ஆரம்பிக்கப் பட்டன.

முதல் கட்டமைப்பை உருவாக்குவதில் சுமார் பத்துவருட காலம் செலவிட்ட ஹஸனுல் பன்னா அவர்கள் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பதியெட்டாம் (1938) ஆண்டில் முத‌ல் கட்டத்தில் இருந்து இரண்டாம் கட்டமான “போராட்டக் குழுவை” உருவாக்கினார். தனது இயக்கத்தின் ஒரு பிரிவினரை சாதாரண சிவில் பிரச்சாரப் பணியில் இருந்து ரானுவ செயற்பாட்டுக்கு பயிற்றுவித்தார். ஆரம்பத்தில் சில பயணக் குழுக்களை அமைத்து பின்பு அவைகளுக்கென சீருடைகள் வழங்கி பின்னர் சிறு சிறு தலைமைத்துவத்திற்குக் கட்டுப்படக்கூடிய ஒருமைபடுத்தப்பட்ட குழுக்களை உருவாக்கினார். பின்பு அவைகளை இணைத்து “அல்ஜிஹாஸ் அஸ்ஸிர்ரி” அல்லது “அத்தன்ழீம் அஸ்ஸிர்ரி” என அழைக்கப்பட்ட ஒரு ஆயுதக் குழுவை உருவாக்கினார்.

இவ்வாயுதக் குழுவில் ஒருவரை இணைத்துக் கொள்ள மிகக் கஷ்டமான நிபந்தனைகளும் மிக நுட்பமான தகுதிகாண் விதிமுறைகளும் பிரயோகிக்கப் பட்டன. தங்களது பாதுகாப்பிற்காகவும் ரகசியத் தன்மைக்காகவும் ஒவ்வொரு தலைவருக்கும் கீழ் ஒன்றுக் கொன்று தொடர்பில்லாத உப குழுக்களை உருவாக்குதல் என்ற ராணுவக் கட்டமைபில் பல குழுக்களாக மேற்படி ஆயுதக் குழு உருவாக்கப்பட்டது.

இவ்வாறு உருவாக்கப்பட்ட ஆயுதக் குழுவிற்கு அஹ்மத் ஸகி, மஹ்மூத் ஸப்பாஃ, அஹ்மத் ஹஸன், பிரபல்ய எழுத்தாளர் முஸ்தபா மஷ்ஹூர் ஆகியோரின் ஒத்தாசையுடன் செயற்படுமாறு அப்துர் ரஹ்மான் அஸ்ஸிந்தி என்பவரை ஹஸனுல் பன்னா அவர்கள் தலைவராக தெரிவு செய்து (மஹ்மூத் ஸப்பாஃ என்பவர் கூற்றுப் படி) தங்களுக்குத் தேவையான கட்டளைகளை தன்னிடம் (ஹஸனுல் பன்னா) இருந்தே நேரடியாகப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் பனித்திருந்தார்கள். இதற்கேற்ப இவ்வாயுதக் குழு ஆங்கிலேய படையினர் கூடும் இடங்களில் கைக் குண்டுகளை வீசியதுடன் ஆங்கிலேயப் படையினர் பயணம் செய்வதற்கான விஷேட புகையிரதத்தில் குண்டு ஒன்றையும் வெடிக்கச் செய்தனர்.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்தைந்தாம் ஆண்டு (1945) “தேசிய கட்சி”யைச் சேர்ந்த மஹ்மூத் அல் ஈஸவி என்பவர் எகிப்தின் அப்போதைய பிரதமர் அஹ்மத் பாட்ஷா மாஹிர் அவர்களை படு கொலை செய்தார். எனினும் மேற்படி கொலையாளி இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் முக்கிய உறுப்பினர்தான் என்பதை இயக்கத்தின் பிரமுகர்களான ஹஸன் அல்பாகூரி மற்றும் செய்யித் ஸாபிக் (பிக்ஹுஸ் ஸுன்னா எனும் பிரபல்ய நூலின் ஆசிரியர்) ஆகியோர் தங்களது நாட்குறிப்புகளில் ஏற்றுக் கொண்டனர்!!.

இதே ஆண்டில்தான் “அல்முஸவ்விர்” சஞ்சிகையால் நடாத்தப் பட்ட “பொதுச் சேவையாளர்” பட்டத்திற்கான கருத்துக் கணிப்பில் ஹஸனுல் பன்னா அவர்கள் பட்டத்திற்குரியவராக தெரிவு செய்யப்பட்டார்கள்.

மேலும் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்தி ஆறாம் ஆண்டு(1946) செய்து கொள்ளப்பட்ட “சித்கி பீபைன்” ஒப்பந்தந்துக்கு எதிராக எகிப்தில் ஆங்காங்கே அரசுக்கு எதிரான பல ஆர்ப்பாட்டங்கள் இடம் பெற்றன. இவ்வார்ப்பாட்டங்களில் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பினரின் ஆயுதக் குழு மும்முரமாக ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் பெரும் முயற்சி செய்தனர். பொதுமக்களுக்கும் போலீஸுக்கும் இடம் பெற்ற மோதல்களில் குறித்த ஆயுதக் குழுவினர் சில போலீஸ் நிலையங்களை குண்டு வைத்துத் தகர்த்தனர். இதனால் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பினருக்கு மக்கள் மத்தியில் பிரபல்யமும் செல்வாக்கும் அதிகரித்து மக்கள் சாரிசாரியாக அமைப்பில் இணைய ஆரம்பித்தனர்.

இவ்வாண்டில்தான் காலித் முஹியித்தீன், கமால் ஹுஸைன், ஹஸனுல் பன்னாவின் இளைய சகோதரர் ஜமால் அல் பன்னா, பிற்காலத்தில் எகிப்திய கொடுங்கோல் ரானுவ ஆட்சியாளராக வந்து இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பினரையே துவசம் செய்த ஜமால் அப்துன் நாஸர் ஆகியோர் அல் குர்ஆன் பிரதி மீதும் கைத்துப்பாக்கி மீதும் சத்தியப் பிரமானம் செய்து “ஆயுதக் குழுவில்” இணைந்து கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தி ஏழாம் ஆண்டு நவம்பர் மாதம் (1947/11) முஸ்லிம்களின் புனித பூமி பலஸ்தீன் முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்குமாக பிரிக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை வெளிவந்தது. இதையொட்டி இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பினர் தங்கள் பத்திரிகையில் யூதர்களுக்கு எதிரான அறபுப் படையணியை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றி யுத்தத்திற்கான ஆயுதங்களையும் பொருளாதாரத்தையும் சேகரிக்க ஒரு குழுவை அமைக்கிறார். இதன் காரனமாக அறபு உலகில் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பினருக்கும் ஹஸனுல் பன்னா அவர்களுக்கும் மிகுந்த செல்வாக்கு ஏற்படுகிறது.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்தியெட்டாம் ஆண்டு பெப்ரவரி மாதம் (1948/02)இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பினர் குறுக்கு வழியில் கிலாபத்தை உருவாக்க யெமனின் அப்போதைய ஆட்சியாளர் யஹ்யா ஹமீதுத் தீன் அவர்கள் எதிர்க் கட்சியைச் சேர்ந்த அப்துல்லாஹ் அல் வஸீரி அவர்களால் படுகொலை செய்யப்பட்டதும் அவரது பேரர் அல் பத்ர் ஹமீதை ஆட்சிக்குக் கொண்டுவர பெரிதும் முயற்சித்தனர். எனினும் குறித்த குறுக்கு வழி கிலாபத் வெறும் இருபத்தி ஆறு நாட்களே நீடித்தது. இவ்வாறு இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பினர் பிற நாட்டில் மேற்கொண்ட புரட்சியினால் எகிப்திய அரசாங்கத்துக்கும் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பினருக்கும் இடையே பெரும் விரிசலை தோற்றுவித்து ஒரு பதட்ட நிலையை உருவக்கியது.

இதே வருடம் மார்ச் மாதம் இருபத்தியிரண்டாம் (1948/03/22) திகதி இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பை சேர்ந்தவர்கள் தொடர்பாக தீர்ப்பு வழங்கிய சிவில் நீதிபதி அஹ்மத் பேக் என்பவர் வீதியைக் கடந்து செல்லும் போது ஆயுதக் குழுவைச் சேர்ந்த ஹுஸைன் அப்துல் ஹாபிழ், மஹ்மூத் ஸைனுஹும் என்ற இருவரால் படுகொலை செய்யப்பட்டார்.

இப்படுகொலை தொடர்பாக விசாரிக்க கலாநிதி அப்துல் அஸீஸ் தலமையில் இஹ்வான்கள் ஒரு குழுவை அமைத்து ஆயுதக் குழுத் தலைவர் அப்துர் ரஹ்மான் ஸிந்தியை விசாரித்த போது ஹஸனுல் பன்னாவின் சிலேடையான வார்த்தையை புரிந்து கொண்டதில் ஏற்பட்ட தவறுதான் நீதிபதியின் கொலைக்குக் காரனம் என்பது தெரியவந்தது. எனினும் கொலைக் குற்றத்திற்கான தண்டப் பனத்தை இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பினர்தான் செலுத்த வேண்டும் என விசாரனைக் குழு முடிவெடுத்தது. பின்னர் அரசாங்கமே அதை கொடுக்க வேண்டும் என பேசித் தீர்க்கப் பட்டது!!

அத்துடன் ஹஸனுல் பன்னாவின் நேரடியான உத்தரவின் மூலமாக அல்லது ஏற்கனவே நாம் விபரித்த ஆலோசனைக் குழுவின் உத்தரவின் பேரில்தான் ஆயுதக் குழு செயற்பட வேண்டும் என உறுதியான தீர்மானம் இவ்விசாரனையில் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் வழமையாக இடம் பெறும் இயக்கத்தின் செவ்வாய் தின உரையில் ஹஸனுல் பன்னா அவர்கள் “மேற்படி நீதிபதியின் படு கொலைக்கும் இஹ்வானுல் முஸ்லிமீனுக்கும் சம்பந்தம் இல்லை” என மறுத்துரைத்தார். எனினும் சுமார் ஐந்து மாததத்தின் பின் குற்றவாளிகளை அரசாங்கம் அடையாளம் கண்டு குற்றம் உறுதிப்படுத்தப்பட்டு இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் உன்மை முகம் சகலருக்கும் அடையாளம் காட்டப் பட்டது.!!

இதே வருடம் நவம்பர் மாதம் பதினைந்தாம் திகதி (1948/11/15) எகிப்து போலீசார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் ரக வாகனம் ஒன்றை எதேச்சையாக சோதனை செய்த போது இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் ஆயுதக் குழு தொடர்பான முக்கிய ஆவனங்களும் கைக் குண்டுகள், வெடி பொருட்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.

மேற்படி ஆவனங்களில் ஏற்கனவே நடந்த குண்டு வெடிப்புகள் பற்றிய திட்டங்களும் எதிர்காலத்தில் செயற்படுத்தப் படவிருந்த அமெரிக்க, பிரித்தானிய தூதரகங்களை குண்டு வைத்து தகர்ப்பதற்கான ரகசிய திட்டங்களும் காணப்பட்டன. இது தொடர்பாக நடாத்தப்பட்ட புலன் விசாரனையில் அஹ்மத் ஆதில் ,மற்றும் இன்னுமொருவர், இஹ்வானுல் முஸ்லிமீன் ஸ்தாபக உறுப்பினரும் ஆயுதக் குழுவின் ஆலோசகருமான முஸ்தபா மஷ்ஹூர் ஆகிய இயக்கத்தின் முக்கிய புள்ளிகள் கைது செய்யப்பட்டனர்.

இதே வருடம் டிசம்பர் மாதம் நான்காம் திகதி (1948/12/04)இப்போதைய கெய்ரோ பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீடத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த கெய்ரோ நகர போலீஸ் பொறுப்பதிகாரி ஸலீம் ஸகி நேரடியாக களத்தில் இறங்கியிருந்தார். எனினும் ஆர்ப்பாட்டத்தின் போது இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பைச் சேர்ந்த மாணவன் ஒருவன் நாலாவது மாடியில் இருந்து வீசிய கைக்குண்டில் அவர் கொல்லப்பட்டார். இதை ஆயுதக் குழுவின் பொறுப்பாளர்களில் ஒருவரான மஹ்மூத் ஸப்பாஃ என்பவர் பின்னொரு காலத்தில் “அக்காலத்தில் ஆர்ப்பாட்டங்களின் போது குண்டு வீசுவது ஒரு சாதாரன செயலே” என நியாயப்படுத்தியும் இருந்தார்.

இதனையொட்டி இஹ்வான்களுக்கும் எகிப்திய அரசாங்கத்துக்குமிடையே பெரும் பதட்ட நிலை தோன்றியது. நிலமையைத் தனித்து அரசாங்கத்துக்கும் இஹ்வான்களுக்குமிடையே ஒரு சுமூக நிலையைத் தோற்றுவிக்க ஹஸனுல் பன்னா அவர்கள் சபாநாயகர் ஹாமித் ஜௌதாஃ மூலமாக பிரதமர் மஹ்மீத் நக்றாஷி பாட்ஷா அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சித்தார். ஆனால் சபாநாயகர் அதை மறுத்து விடவே மன்னர் பாரூக்குடன் அல்லது ஜனாதிபதி செயலகத் தலைவர் இப்றாஹீம் அப்துல் ஹாதியுடன் தொடர்பு கொள்ள எத்தனித்தார் .ஆனால் அதுவும் கைகூடவில்லை.

இதை தொடர்ந்து மேற்படி சம்பவம் இடம் பெற்று இரண்டு நாட்களுக்குப் பின் டிசம்பர் ஆறாம் திகதி இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் உத்தியோக பூர்வ பத்திரிகை அரசங்கத்தால் தடை செய்யப்பட்டது. இதே தினத்தில் அரச சார்பு பத்திரிகை “அல் அஸாஸ்” மிக விரைவில் மகிழ்சிகரமான செய்தியொன்று வெளியிடப்படும் என்ற தகவலை வெளியிட்டது. இதனால் இஹ்வான்கள் மத்தியில் பெரும் பதட்டம் நிலவியது. என்ன விலை கொடுத்தாவது இயக்கத்தைக் காப்பாற்ற ஹஸனுல் பன்னா அவர்கள் எவ்வளவோ முயற்சிகள் செய்தார். ஆனால் எதுவும் பயனளிக்கவில்லை.

டிசம்பர் எட்டாம் திகதி இரவு பத்து மணிக்கு உள்ளக அமைச்சின் பொறுப்பாளர் அப்துர் ரஹ்மான் அம்மார் என்பவர் ஹஸனுல் பன்னாவைத் தொடர்பு கொண்டு சற்று நேரத்தில் மகிழ்ச்சிகரமான ! முக்கிய செய்தியொன்று வானொலியில் ஒலிபரப்பப்படும் எனத் தெரிவித்தார்.

கெய்ரோவின் தலைமைக் காரியாலயத்தில் இயக்கத்தலைவர்கள், உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மகிழ்சிகரமான! முக்கிய செய்தியை எதிர்பார்த்து வானொலியைச் சூழ அமர்ந்திருந்த போது ரானுவ தலைமை அதிகாரியினால் ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தியெட்டாம் ஆண்டுக்கான அறுபத்தி மூண்றாம் சட்டமாக “இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் அனைத்துக் கிளைகளும் கலைக்கப்பட்டதாகவும் அதன் பொருளாதாரம் மற்றும் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்” என்ற சட்டம் பிரகடனப் படுத்தப்பட்டது.

இச்சட்டத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த இஹ்வான்கள் காரியாலயத்தில் இருந்து வேளியேற எத்தனித்த போது அரச படையினர் சூழ்ந்து கொண்டு ஹஸனுல் பன்னா அவர்களைத் தவிர அனைவரையும் கைது செய்தனர். இவ்வாறு அரசாங்கம் வைத்த பொறியில் இஹ்வானுல் முஸ்லிமீன்கள் மாட்டிக் கொண்டனர்.

தன்னை மாத்திரம் கைது செய்யாமல் விட்டு விட்டதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதை உணர்ந்த ஹஸனுல் பன்னா இயக்கத்தின் முதல் தர பொறுப்பாளர் என்ற வகையில் தன்னையும் கைது செய்யும் படி அரசாங்கத்திடம் எவ்வளவோ மண்றாடியும் அரசாங்கம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

இவ்வாறு இயக்கம் கலைக்கப்பட்டதற்கு முழுப் பொறுப்பாளி பிரதமர் நக்றாஷி பாட்ஷாதான் எனக் கருதிய இஹ்வான்கள் அவரை எப்படியாவது கொண்றொழித்து விட வேண்டும் என கங்கணம் கட்டினர். இதை பின்பு இது தொடர்பான வழக்கில் வாதி தரப்பில் ஆஜரான அப்துல்லாஹ் றஷ்வான், ஹஸனுல் பன்னாவின் இளைய சகோதரர் ஜமால் பன்னா ஆகியோரின் கூற்றுகள் உறுதி செய்கின்றன.

ஆனாலும் ஆளும் கட்சித் தலைவர், தேசிய ராணுவ பொறுப்பாளர், பிரதமர், உள்ளக மற்றும் நிதி அமைச்சர் ஆகிய பொறுப்பு வாய்ந்த பதவிகளை வகித்த மஹ்மூத் நக்றாஷி அவர்கள் இவ்வானுல் முஸ்லிமீன் இயக்கம் கலைக்கப்பட்டதனால் இஹ்வான்கள் தன்னை படுகொலை செய்ய முயற்சிப்பார்கள் என்பதை அறிந்திருந்ததால் தனது பாதுகாப்பை மிகவும் பலப்படுத்தினார்.

எனினும் டிசம்பர் இருபத்தியெட்டாம் திகதி செவ்வாய்க் கிழமை காலை பத்து மணிக்கு உள்ளக அமைச்சின் காரியாலயத்துக்குள் ராணுவ சீருடையில் நுழைந்த இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது பாதுகாப்புப் படையினருடன் வீற்றிருந்த பிரதமர் நக்றாஷி பாட்ஷாவின் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து படுகொலை செய்துவிட்டார்.

இதை தொடர்ந்து ஹஸனுல் பன்னா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அவரது ஆயுதக் குழுத் தலைவர் அப்து ரஹ்மான் ஸிந்தி கைது செய்யப்பட, அதன் புதிய தளபதியாக செய்யித் பாயிஸ் என்பவர் நியமிக்கப் பட்டார்.

இதைதொடர்ந்து புதிய ஆண்டான ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்தொன்பது ஜனவரி மாதம் பதின் மூண்றாம் திகதி காலை இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பைச் சேர்ந்த ஷபீக் அனஸ் என்பவர் எகிப்தின் மேன் முறையீட்டு நீதிமன்றத்திற்குள் ஒரு கைப் பெட்டியுடன் நுழைந்து தான் சில வழக்குகள் தொடர்பாக கிராமப்புறங்களின் பிரதிநிதியாக அரசாங்க வக்கிலை சந்திக்க வந்ததாகக் கூறி தனது பெட்டியை அங்கே வைத்து விட்டு காலை உணவு அருந்தி வருவதாகக் கூறி வெளியேறினார்.

இவரது நடவடிக்கையில் சந்தேகங் கொண்ட அலுவலகப் பணியாளர்கள் பாதுகாப்புப் படையினருடன் தொடர்பு கொண்டு பெட்டியை பரி சோதித்க அதை வெளியே கொண்டு சென்ற போது வீதியில் வைத்து அப்பெட்டி வெடித்து விட்டது.!!

வெடி குண்டைக் கொண்டு வந்த ஷபீக் அனஸ் என்பவரை போலீஸார் கைது செய்து விசாரனைக்குட்படுத்திய போது அவர் “ஜீப் ரக வாகனத்தில் இருந்து போலீஸாரால் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவனங்களையும் தடயங்களையும் அழிக்கும் நோக்கில் ஆயுதக் குழுவின் புதிய தலைவர் செய்யித் பாயிஸ் என்பவரின் பணிப்புரையின் பேரில் நீதிமன்றத்தை தகர்க்க வந்ததாக விசாரனையின் போது ஏற்றுக் கொண்டார்.

இதனைத்தொடர்ந்து அப்துல் அஸீஸ் பாட்ஷா என்பவரும் முஸ்தபா பேக் என்பவரும் வீட்டுக் காவலில் வைத்திருந்த ஹஸனுல் பன்னா அவர்களை சந்தித்து ஒரு ரகசிய பேச்சுவார்த்தை நடாத்துகிறார்கள்.

அடுத்த நாள் பத்திரிகையில் ஹஸனுல் பன்னா அவர்கள் ஒரு அறிக்கையை விட்டிருந்தார்கள். அதில் மேற்படி வண்முறைகளில் ஈடுபட்ட, தான் பத்து வருடங்களாக உருவாக்கி கட்டிக்காத்த தனது ஆயுதக் குழுவைச் சார்ந்தவர்களை அவர்கள் “இஹ்வான்களும் இல்லை, முஸ்லிம்களும் இல்லை” என தெரிவித்திருந்தார்கள்.!!

ஆக இஸ்லாத்தின் பெயரால் இயக்கத்தில் சேர்ந்து தங்களது உயிர்களையும் அர்ப்பனிக்கத் துணிந்த அப்பாவி இளைஞர்கள் “இஹ்வான்களும் இல்லை, முஸ்லிம்களும் இல்லை” எனக் காட்டிக் கொடுக்கப்பட்டு முத்திரை குத்தப்பட்ட கசப்பான வரலாறு இவ்வாறுதான் அரங்கேறியது.

எனவே இதன் மூலம் மேற்படி “இஹ்வான்களும் இல்லை, முஸ்லிம்களும் இல்லை” என்ற கூற்று யாரால் கூறப்பட்டது என்ற கேள்விக்கு இஹ்வானுல் முஸ்லிமீன் ஸ்தபகர், தலைவர் ஹஸனுல் பன்னாவால் கூறப்பட்டது என்ற விடையும் யாருக்குக் கூறப்பட்டது என்ற கேள்விக்கு இஸ்லாத்தின் பெயரால் இயக்கத்தில் சேர்ந்து தங்களது உயிர்களையும் அர்ப்பனிக்கத் துணிந்த அப்பாவி இளைஞர்களுக்கு கூறப்பட்டது என்ற விடையும் எச்சந்தர்ப்பத்தில் கூறப்பட்டது என்ற கேள்விக்கு அரசாங்கத்தின் நெருக்கடிகளின் போது, தனது உயிருக்கு ஆபத்து என்று வந்த போது, தனது மலினமான அரசியல் அபிலாஷைகளுக்கு பங்கம் ஏற்படும் என்ற போது என்ற விடையும் எமக்குக் கிடைக்கிறது.!!

படிப்பது ராமாயனம் இடிப்பது பெருமாள் கோயில் என்ற ரீதியில் ஒரு புறத்தே ஒற்றுமைக் கோஷம் எழுப்பிக் கொண்டு மறு புறத்தே நாலாந்தர அரசியல் லாபங்களுக்காக முஸ்லிம்களையே கொண்று குவிப்பதற்கு இஸ்லாத்தில் ஆதாரம் இருக்கிறதா என்பது ஒரு புறமிருக்க, தன்னை நம்பி வந்த அப்பாவி மக்களையே காட்டிக் கொடுத்த மாபெரும் வரலாற்றுத் துரோகம் இவ்வாறுதான் ஹஸனுல் பன்னா என்பவரால் அரங்கேற்றப் பட்டது என்பது கடும் விசனத்திற்கும் கண்டனத்துக்கும் உரியதாகும்.

ஹஸனுல் பன்னா என்பவரின் நேரடிக் கட்டளையின் பேரில் செயற்பட்ட ஆயுதக் குழுவினரை அவர்கள் “இஹ்வான்கள் இல்லை” என மறுத்ததும் இல்லாமல் “முஸ்லிகளும் இல்லை” என மறுத்ததன் மூலமாக “முஸ்லிம்களை முஸ்லிம்கள் இல்லை” என மறுக்கும் வரலாற்றில் புதைந்து போன சித்தாந்தம் உயிரூட்டப்பட்டு நவீன காலத்தில் இவ்வாறுதான் மீண்டும் விதைக்கப்பட்டது என்பதையும் இதனூடாக நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இதன் பின்னர் ஹஸனுல் பன்னா அவர்கள் கொலை செய்யப்பட்டதும் அதை அரசாங்கமே செய்தது என சிலரும் இல்லை!! இல்லை! இந்தத் துரோகச் செயலினால், காட்டிக் கொடுப்பால் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்க ஆயுதக் குழுவினர்தான் ஹஸனுல் பன்னாவை கொலை செய்தார்கள் என மற்றும் சில அரசியல் ஆய்வாளர்கள், அவதானிகளும் பலத்த சர்ச்சை கொள்கிறார்கள்.

இது பற்றிய விரிவான விளக்கங்களை இன்ஷா அல்லாஹ் தேவையேற்படும் போது இனிவரும் கட்டுரைகளில் நோக்குவோம்.

எமது பிராத்தனை:

“யா அல்லாஹ்! சத்தியத்தை எமக்கு சத்தியமாகக் காட்டி அதனைப் பின்பற்றும் பாக்கியத்தையும் அசத்தியத்தை அசத்தியமாகக் காட்டி அதனை தவிர்ந்து வாழும் பாக்கியத்தையும் எமக்கு அருள்வாயாக!!”

யா அல்லாஹ் எமது பாவங்களையும் எம்மை இறை விசுவாசத்தால் முந்திய எமது சகோதரர்களின் பாவங்களையும் மண்ணிப்பாயாக!விசுவாசங் கொண்டவர்கள் மீது எம் உள்ளங்களில் எந்தக் காழ்ப்புணர்வையும் ஏற்படுத்தி விடாதே! எம் இரட்சகா! நீதான் மன்னிப்பவனாகவும் கிருபை உள்ளவனாகவும் இருக்கிறாய்!!!

(குறித்த “இஹ்வான்களும் இல்லை முஸ்லிம்களும் இல்லை” என்ற அறிக்கை ஹஸனுல் பன்னா அவர்களால் தான் வெளியிடப்பட்டது என்பதை இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் ஸ்தாபக உறுப்பினர் கலாநிதி மஃமூத் அப்துல் ஹலீம் என்பவர் தனது “الإخوان المسلمون أحداث صنعت التاريخ”
(இஹ்வானுல் முஸ்லிமீன் வரலாறு படைத்த சில நிகழ்வுகள்” என்ற இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் உத்தியோக பூர்வ வரலாற்றுப் பதிவில் இரண்டாம் பாகத்தில் எழுபத்தி ஐந்தாம் பக்கத்தில் (தாருத் தஃவா வெளியீடு) உறுதி செய்துள்ளார் என்பதை வாசகர்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.)

நன்றியுடன்…….
அபூ ஸைத் அல் அதரி
(மௌலவி எம். ஐ. எம். நௌபர் -காஷிபி),
பிரச்சாரகர் – தாருல் அதர் அத்தஅவிய்யா,
காத்தான்குடி – இலங்கை.
E-mail:- nowfer78@hotmail.com.
Mobile:33283253 – Skype ID : nowfer78

Leave a comment »

ஒற்றுமை கோசம் போடும் கூட்டமே!!! தூய இஸ்லாத்தின் பால் வாரீர்…

அஸ்ஸலாமு அழைக்கும்…
அன்பின் ஜ‌மாஅத்தே இஸ்லாமி ச‌கோத‌ர‌ நெஞ்சங்க‌ளே!

ஒற்றுமை கோசம் போடும் கூட்டமே!!! தூய இஸ்லாத்தின் பால் வாரீர்…
வழிகெட்ட கொள்கை உடைய்யோரே!!! சிந்தித்து செயல்படுவீரானால் அல்-குரான், அஸ்-சுன்னாவின் பால் வாரீர்….

“அல்லாஹ் தஆலாவின் தந்தை” என தன் பெயர் முன்னால் பெயர் வைத்துக் கொண்டு கண்மணி முஹம்மத் (ஸல்) அவர்களையே பொய்யராக்கிய இத்தகைய ஒரு இமாம் உருவாக்கிய ஜமாஅத்தை பின்பற்றி நரகம் செல்லப் போகிறீர்களா???

நாம் விமர்சிப்பதற்குப் பல காரணங்கள் நிறைந்திருந்தாலும் பிரதான காரணங்கள் இரண்டு ஆகும்.

முதலாவது காரணம்:- ஜமாஅத்தே இஸ்லாமியின் ஸ்தாபகர் மெளலான மெளதூதியை அவ்வியக்கவாதிகள் கண்மூடிப்பின்பற்றல்.

இரண்டாவது காரணம்:- இறை நிராகரிப்பாளரான கொமைனியை இஸ்லாமிய இலட்சியவாதி என அவர்கள் பறைசாற்றிவருகின்றன‌ர்.

இவர்கள் மீது பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. அவற்றில் பிரதானமானவற்றை பின்வருமாறு பட்டியல் இட்டுக் காண்பிக்க முடியும்.

1. ஸஹாபாக்களைக் குறைகாணுதல்.
2. ஸூன்னாவுக்கெதிரான நிலைப்பாடுகளைக் கொண்டிருத்தல்.
3. அல்-குர்ஆனுக்கு சொந்த விளக்கம் கொடுத்தல்.
4. இஸ்லாத்திற்கு அரசியல் ரீதியான விளக்கம் கொடுத்தல்.
5. நபிமார்களின் இஸ்மத்தில் குறை காணுதல்.
6. தஜ்ஜாலின் வருகையை மறுத்தல்.
7. கழா – கத்ரை மறுத்தல்.
8. ஷரீஅத்துடைய பிரயோகங்கள் பலவற்றுக்குப் பிழையான விளக்கங்கள்
கொடுத்துள்ளமை.

9. பகுத்தறிவுக்கும் ரசனைக்கும் ஏற்புடையதாக அமையாத (ஆஹாதான) ஹதீஸ்களை,அவை ஸஹீஹானவையாக அமைந்திருந்த போதிலும் அவற்றை நிராகரித்தல்.

10. அல்-குர்ஆனுடன் முரண்படும் மேற்குறித்த வகை ஹதீஸ்களை நிராகரித்தல் வேண்டும்.

11. வரலாற்று உண்மைகளுடன் முரண்படும் குறித்த வகை ஹதீஸ்களை நிராகரித்தல் வேண்டும்.

12. ஹதீஸ்களை ஸஹீஹானவையாக இருந்த போதிலும் அவை பரஸ்பரம் முரண்படும் போது அவற்றை நிராகரித்தல் வேண்டும்.

13. ஸஹீஹூல் புஹாரி, ஸஹீஹூல் முஸ்லிம் முதலான கிரந்தங்களில் பதிவாகியுள்ள சில ஸஹீஹான ஹதீஸ்களையும் நிராகரித்துள்ளமை.

இவை மாத்திரமில்லை இது போன்ற பல வழிகெட்ட கொள்கையிலேயே இன்னும் இவர்கள் இருக்கின்றார்கள். அது மட்டுமா இவ்வழிகெட்ட இயக்க இஸ்தாபகரின் கூற்றைக் கவனியுங்கள்….

நபிகளார்(ஸல்)அவர்களின் வார்த்தைகளில் பொய்யுள்ளதாம் மெளதூதி கூறுகின்றார்!!!

57 سنة ولم يخرج الدجال فدل على أن الرسول لم يكن ظنه صحيحا. كتاب الرسائل والمسائل في ص130قال المودودي: لقد مرت

“இன்றோடு நூற்றி முப்பது வருடங்கள் கழிந்து விட்டன. இன்னும் ‘தஜ்ஜால்’
வெளிப்படவில்லை.நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றில் நம்பகத்தன்மை இல்லை என்பதையே இது அறிவிக்கின்றது.” (ஆதாரம்:அர்ரஸாயில் வல் மஸாயில் ஐம்பத்தி ஏழாம் பக்கம்).

“எந்த விதத்திலும் என்னிடத்தில் களா-கத்ருடைய மஸ்அலா ஈமானின் பாகத்தை சேர்ந்ததல்ல.” கூறியவர் – அபுல் அஃலா மவ்தூதி (ஜமாத்தே இஸ்லாமி) நூல் – மஸ்அலா ஜப்று – கத்ரு 09

“இஸ்லாமிய பரிபாஷையில் எவர்களை மலக்குகள் என்று சொல்லுகின்றார்களோ அவர்கள் ஏறக்குறைய இந்தியா மற்ற நாடுகளில் உள்ள முஷ்ரிகீன்கள் அவர்களின் மதத்தில் தேவுகள், பிசாசுகள் என்று சொல்லுகின்றார்களோ அவைகள் தான்.”
கூறியவர் – அபுல் அஃலா மவ்தூதி (ஜமாத்தே இஸ்லாமி)
நூல் – தஜ்தீது வஇஹ்யாயேதீன் – 14

இவ்விய‌க்க‌த்தின் பார‌தூர‌ம் தெரியாமல் மார்க்க‌த்தின் அடிப்ப‌டை அம்ச‌ங்க‌ளும் தெரியாம‌ல் அப்பாவித்த‌ன‌மாக‌ ‘முஅஸ்க‌ர் என்றும் ஜ‌ம்இய்யா என்றும் அஸாபீர் என்றும் பாடுபடும் இளைஞ‌ர்க‌ளையும், யுவ‌திக‌ளையும் அல்லாஹ் ஒருவ‌னால் தான் நேர்வழிகாட்ட‌ முடியும். த‌வ‌றான‌ கொள்கையைக் கொண்ட‌ அவ்விய‌க்க‌த்தில் இருந்து இன்றில்லாவிட்டாலும் என்றாவ‌து ஒரு நாள் அச்ச‌கோதர‌ர்க‌ள் ச‌த்திய‌த்தை நோக்கி வ‌ர‌த்தான் போகின்றார்க‌ள். பொறுத்திருந்து பார்ப்போம். இன்ஷாஅல்லாஹ்.

இவர்கள் முன்வருவார்கள் என்றால் அல்லாஹ்வின் உதவியால் இவர்களுடன் அழகிய முறையில் விவாதிக்கவோ?../ கலந்துரையாடலோ? செய்ய தயாராகவே உள்ளோம்.
(இன்ஷா அல்லாஹ் தொடரும்…)

“ஒரு சுன்னாவினை உயிர் வாழ வைப்பவன் ஒரு சமுதாயத்தினை வாழ வைத்தவன் போன்றாவான்.”
அல்லாஹ் போதுமானவன்.

***கட்டுப்பாட்டகம்***
shaththiyaislam@gmail.com

Leave a comment »

வெளிநாட்டில் வேலை செய்பவரா நீங்கள்..?

வெளிநாட்டில் வேலை செய்பவரா நீங்கள்..? கொஞ்சம் நேரம் ஒதிக்கி இத படிங்க..
இது உங்களை பற்றியது…

இஸ்லாமியர்களில் பலர் பொருளாதார தேவைக்காக வெளிநாடு சென்று, அங்கேயே பல ஆண்டுகளாக தங்கி வேலை செய்பவர்களாக இருக்கின்றார்கள். இஸ்லாத்தின் பார்வையில் இதுபோன்ற பயணம் கூடுமா? என்பதை நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும். இஸ்லாத்தில் பொருளாதாரத்தை அதிகளவில் திரட்டுவது தவறோ, பாவகாரியமோ அல்ல.ஆனால் அதை மட்டும் காரணம் காட்டி மற்ற கடமைகளை புறக்கணிப்பது, உதாசீனப்படுத்துவது மிகவும் தவறாகும்.

இஸ்லாத்தில் இறைவனுக்கு செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளை காரணம் காட்டி கூட நம் பெற்றோர்களுக்கு, மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகளை புறக்கணித்து விடமுடியாது. அவ்வாறு ஒருவர் செய்வாரானால் அவர் இறைவனிடத்தில் இறை நேசராக கருதப்படமாட்டார். மாறாக குற்றவாளியாகவே கருதப்படுவார்.

இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு சமயங்களில் தெளிவு பட உணர்த்தியிருக்கின்றார்கள்..

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலிலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னிடம் ”அப்துல்லாஹ், நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வணங்குவதாக எனக்குக் கூறப் படுகிறதே!” என்று கேட்டார்கள். நான் ;ஆம்! அல்லாஹ்வின் தூதரே!” என்றேன். நபி (ஸல்) அவர்கள் ;இனி அவ்வாறு செய்யாதீர்! (சில நாட்கள்) நோன்பு வையும்; (சில நாட்கள்) விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும்(சிறிது நேரம்) உறங்கும்! ஏனெனில் உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன . உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன, உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன உம் விருந்தினருக்குச்செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன! ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்! ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்றபத்து மடங்கு (நன்மை)கள் உண்டு! (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்!” என்று கூறினார்கள். நான் சிரமத்தை வலிந்து ஏற்றுக் கொண்டேன்; அதனால், என்மீது சிரமம் சுமத்தப்பட்டுவிட்டது! ;

அல்லாஹ்வின் தூதரே! நான் வலுவுள்ளவனாக இருக்கிறேன்!” என்று நான் கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள்; “தாவூத் நபி (அலை) அவர்கள் நோன்பு நோற்றவாறு நீர் நோன்பு நோற்பீராக! அதைவிட அதிகமாக்க வேண்டாம்!” என்றார்கள். தாவூத் நபியின் நோன்பு எது?’ என்று நான் கேட்டேன் ; ”வருடத்தில் பாதி நாட்கள்!” என்றார்கள். அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலிலி) அவர்கள் வயோதிகம் அடைந்த பின் நபி (ஸல்) அவர்களின் சலுகையை நான் ஏற்காமல் போய்விட்டேனே!’ என்று (வருத்தத்துடன்) கூறுவார்கள்!” என அபூசலமா அவர்கள் கூறுகிறார்கள். (நூல்: புகாரி 1975)

அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள்
சல்மான் (ரலி), அபுத்தர்தா (ரலி) ஆகிய இரு வரையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். சல்மான் அபுத்தர்தாவைச் சந்திக்கச் சென்றபோது (அபுத்தர்தாவின் மனைவி) உம்முத் தர்தாவை அழுக்கடைந்த ஆடை அணிந்திருக்கக் கண்டார். உமக்கு என்ன நேர்ந்தது?’ என்று அவரிடம் சல்மான் கேட்டார். அதற்கு உம்முத் தர்தா (ரலி) அவர்கள், உம் சகோதரர் அபுத்தர்தாவுக்கு இவ்வுலகில் எந்தத் தேவையுமில்லை’ என்று விடையளித்தார்.

(சற்று நேரத்தில்) அபுத்தர்தா வந்து சல்மானுக்காக உணவு தயாரித்தார். சல்மான் (ரலி) அவர்கள் அபுத்தர்தா விடம், உண்பீராக!’ என்று கூறினார். அதற்கு அபுத்தர்தா, நான் நோன்பு நோற்றிருக்கிறேன்…’ என்றார். சல்மான் ;நீர் உண்ணாமல் நான் உண்ண மாட்டேன்” என்று கூறியதும் அபுத்தர்தாவும் உண்டார். இரவானதும் அபுத்தர்தா (ரலி) அவர்கள் நின்று வணங்கத் தயாரானார்கள்.. அப்போது சல்மான் (ரலி) அவர்கள், உறங்குவீராக!’ என்று கூறியதும் உறங்கினார். பின்னர் நின்று வணங்கத் தயாரானார். மீண்டும் சல்மான், உறங்குவீராக!’ என்றார். இரவின் கடைசி நேரம் வந்ததும் சல்மான் (ரலி) அவர்கள், இப் போது எழுவீராக!’ என்று கூறினார்கள். இருவரும் தொழுதனர்.

பிறகு அபுத்தர் தாவிடம் சல்மான் (ரலி) அவர்கள்,“*நிச்சயமாக உம் இறைவனுக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன உமக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன* உம் குடும்பத்தாருக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன அவரவருக்குரிய கடமைகளை.,நிறைவேற்றுவீராக! என்று கூறினார்கள். பிறகு அபுத்தர்தா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து இந்த விஷயத்தைக் கூறினார் கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், சல்மான் உண்மையையே கூறினார்*!” என்றார்கள். (நூல்: புகாரி 1968)

இந்த செய்திகளும் இது போன்ற பல செய்திகளும் இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை காரணம் காட்டி, மனைவிக்கு செய்ய வேண்டிய தாம்பத்தியம் எனும் கடமையை புறக்கணிப்பதையோ பெற்றோரை பராமரித்தல் எனும் கடமையை நிறைவேற்றத் தவறுவதையோ மிகவும் வன்மையாக கண்டிப்பதை காணலாம். இந்த அடிப்படையை தெளிவாக புரிந்துக்கொண்டு வெளிநாட்டில் பல ஆண்டுகளாக வேளை செய்பவர்களின் நிலையை பார்த்தோம் என்றால்..,

இன்று வெளிநாடுகளில் தங்கி வேளை பார்ப்பவர்களில் பலர் திருமணம் முடித்தவர்களாக, பிள்ளைகளை பெற்றவர்களாக, வயதான பெற்றோரை கொண்டவர்களாக இருக்கின்றார்கள். இன்னும் சிலர் திருமணம் முடித்துவிட்டு புது மனைவியை விட்டு வந்தவர்களும் இருக்கின்றார்கள்அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை மிகவும் சாதாரணமாக புறக்கணிக்கின்றார்கள்.

தொழுகையை காரணம் காட்டியே மற்ற கடமைகளை புறக்கணிக்கக் கூடாது எனும்போது, பொருளா தாரத்தை காரணம் காட்டி இதர கடமைகளை புறக்கணிப்பது இறைவனிடத்திலும், இறைத் தூதரிடத்திலும் எவ்வளவு பாரதூரமான பாவகாரியம் என்பதை இதுபோன்ற சூழ்நிலையில் சிக்கித்தவிப்பவர்கள் சிந்திக்க வேண்டும்.

பெரும்பாலானோர் பொருளாதார பிரச்சனையை காரணம் காட்டி தான் வெளிநாடு செல்கிறார்கள் , ஆனால் வெளிநாட்டில் சென்று எந்த வேலையாவது செஞ்சி குடும்பத்த காப்பாத்தலாம் என்று உறுதியோடு செல்லும் நம் சகோதரர்களுக்கு நமது சொந்த நாட்டில சம்பாதிக்க முடியும் என்ற உறுதி இல்லாமல் போய்விட்டது .

இதையல்லாம் வேண்டும் என்று நாங்கள் செய்யவில்லை , குடும்ப , கால சூழ்நிலைகள் எங்களை இப்படி செய்ய வைக்கிறது என்கிறார்கள் உண்மைதான் ஆனால் அதற்காக காலமெல்லாம் ஆங்கேயே இருக்கிறது நாயமா ? அதற்க்கான மாற்று ஏற்பாடு செய்ய மாடீர்களா ?

வெளிநாட்டில் வேலை செய்வது தான் பெருமை , சந்தோஷம் என்று நீங்கள் இருந்தால் நீங்கள் தான் ஏமாளி … எத்தனை பேர் மனைவியின் பிரசவத்திற்கு ஊரில் இருகிறார்கள் ? எத்தனை பேர் பெற்றோரின் உடல் நல குறைவிற்கு கூட இருந்து கவனித்து கொள்கிறார்கள் ? எல்லாத்தையும் போனில் சரி செய்து விடுவார்களா ?

(31:14) “நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன் ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.”

இதில் கொடுமை என்ன வென்றால் சில மனைவி மார்களே வலுகட்டாயமாக கணவன்களை வெளிநாட்டிற்கு அனுப்பி வைகிறார்கள் என்ன கொடும..

எத்தன பேர் தன் இளமையை வீனடிகிறார்கள் தெரியுமா? எல்லாம் அற்ப சந்தோசத்திற்கு , வருடத்திற்கு ஒரு முறை ஊர் வருபவர்கள் ரொம்ப குறைவு அப்படியே வந்தாலும் ஒரு மாசம் அவ்ளோது தான் உடனே ஸ்டைலா கேளபிடுரங்க .. சிலர் இரண்டு வருத்திற்கு ஒரு முறை , இன்னும் சிலர் ஐந்து , பத்து வருடம் கழித்து வருபவர்களும் இருகிறார்கள் (ஏதோ சும்மா சொல்லணும் என்பதேக்காக இங்கே சொல்லவில்லை இது நம் ஊரில் நடக்கும் உண்மை நிலை )

எத்தனை பேர் தன் குழந்தையுடன் அமர்ந்து பேசி இருப்பீர்கள் ? குழந்தை பிறந்து நான்கு , ஐந்து ஆண்டுகள் கழித்து வரும் வாப்பாவை பார்த்து யாரும்மா இது என்கிறது பெற்ற பிள்ளை என்ன கொடும பாத்திங்களா ? வாழ்கையை எப்படி வாழ்வது என்றே நமக்கு தெரியவில்லை …

ஒரு பிள்ளைக்கு செய்ய வேண்டிய கடமையை முழுமையான முறையில் வெளிநாட்டில் இருந்து கொண்டு எப்படி நிறைவேற்றமுடியும்? வாரந்தோறும் போன் செய்து விசாரிப்பதின் மூலமோ, மாதாமாதம் பணம் அனுப்பி வைப்பதினாலோ தங்களது கடமை நிறைவேறிவிட்டது என்று தப்புக் கணக்கு போட்டு விடக்கூடாது.

இதையும் தாண்டி இங்கிருந்து கொண்டு நிறைவேற்ற முடியாத பல கடமைகள் தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது என்பதை உணர வேண்டும்.

(17:23) “அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் – அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் – இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!”

(17:24) “இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக!”

நமது பிள்ளைகளையும், பெற்றோரையும் வேண்டுமானால் மற்றவர்கள் பார்த்துக் கொள்ளமுடியும் என்று வைத்துக் கொள்வோம். மனைவியின் தேவையை கணவரைத் தவிர வேறு யாரால் நிறைவேற்ற முடியும்? மணிக் கணக்கில் போனில் பேசி குடும்பம் நடத்தவா திருமணம் செய்தோம்.? இதனால் கணவன் மனைவிகளுக்கு இடையே வீண் சந்தேகங்களும் ஏற்படுகின்றன என்பது எதார்த்தமான உண்மை

நீங்கள் இங்கயே சம்பாரிதாலும் , அங்கே போய் சம்பாரிதாலும் எல்லாம் ஒன்று தான் , நீங்கள் அங்கே செலவழிப்பதும் , பிரயாண செலவையும் கூட்டி கழிச்சு பாருங்க , சரியா வரும் ..

குடும்பத்துடன் வெளிநாட்டில் இருப்பதற்கான எல்லா வசதிகளும் ஒருவருக்கு கிடைத்தால் அதை மார்க்க அடிப்படையில் குற்றம் கூற முடியாது. ஆனால் அந்த நிலை பெரும்பாலோனோருக்கு அமைவதில்லை. எனவே இதுபோன்ற தவறை செய்பவர்கள் இதிலிருந்து மீண்டு வர முயற்சி செய்ய வேண்டும். வாழ்நாளில் பெரும் பகுதிகளை வெளிநாட்டிலேயே கழிப்பவர்கள் முக்கியமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நம்முடைய வாழ்க்கையை அமைத்து கொள்வது நம்முடைய கையில் தான் இருக்கிறது , மாற்றதிற்கு முயற்சி செய்யுங்கள் இன்ஷால்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு துணைபுரிவான்.

Leave a comment »

மறுமணம் செய்யாதவள் ஆடையற்றவள்!!!


أُحِلَّ لَكُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ إِلَى نِسَآئِكُمْ هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُنَّ

‘நோன்பு கால இரவில் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. (உங்கள் மனைவியரான) பெண்கள் உங்களுக்கு ஆடையாகவுள்ளனர். நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவுள்ளீர்கள்’. (அல்குர்ஆன் 2:187)

நோன்பு நோற்பவர்கள் பகல் காலங்களில் உண்ணாமலும் பருகாமலும் இருப்பது போல் உடலுறவிலும் ஈடுபடாமலும் இருக்க வேண்டும். நோன்பு கால இரவுகளில் இவற்றைச் செய்யலாமா என்ற சந்தேகத்திற்கு விடையாகவே இவ்வசனம் அருளப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் தாம்பத்திய உறவு கொள்வதற்கு எந்தத் தடையும் இல்லை என்று இவ்வசனம் கூறுகிறது.

இவ்வசனம் நேரடியாகக் கூறுவது இதுதான் என்றாலும் மறைமுகமாக இல்லறவாழ்வு சிறப்பாக அமைவதற்கான சிறந்த அறிவுரையும் இதனுள் அடங்கியுள்ளது.

ஆண்களும் போகப் பொருள் தான்:-
பெண்கள், ஆண்களின் போகப் பொருட்கள் என்று ஆண்வர்க்கத்தினர் நினைக்கின்றனர். இந்த நவீன காலத்தில் கூட இவ்வாறு நினைப்பவர்கள் உள்ளனர். அந்த நினைப்பில் உண்மை இருப்பதை நாம் மறுக்க முடியாது. பெண்கள் ஆண்களின் உணர்வுகளுக்கு வடிகாலாகவும், ஆண்களுக்கு இன்பம் அளிப்பவர்களாகவும் உள்ளதைக் கண்கூடாக நாம் கண்டு வருகிறோம். இந்த வகையில் பெண்கள் ஆண்களின் போகப்பொருட்கள் என்று கூறுவது சரிதான். ஆனால் இது பாதி உண்மை தான். இன்னொரு பாதி உண்மையை ஆண்கள் புரிந்து கொள்ளவில்லை. பெண்கள் எப்படி ஆண்களின் போகப் பொருட்களாக உள்ளனரோ அது போல் ஆண்களும் பெண்களின் போகப் பொருட்களாக உள்ளனர் என்பதைத் தான் ஆண்வர்க்கம் புரிந்து கொள்ளவில்லை. அது தான் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாகும்.

‘அவர்கள் உங்களுக்கு ஆடை நீங்கள் அவர்களுக்கு ஆடை’ என்ற சிறிய சொற்றொடரில் இந்த உண்மையைத் திருக்குர்ஆன் புட்டுவைக்கிறது. ஒருவர் அணிந்து கொள்வதற்கு ஆடை எவ்வாறு ஒத்துழைக்கிறதோ அது போல் பெண்கள் இன்பம் அனுபவிக்க ஆண்கள் ஒத்துழைக்க வேண்டும். ஆண்களும் பெண்களும் ஒத்துழைக்க வேண்டும். பெண்களுக்கு எந்த உணர்ச்சியும் இல்லை. தனது வெறி அடங்கினால் போதும் என்று நினைக்கும் கணவனை எந்தப் பெண்ணும் விரும்பமாட்டாள். அவளுக்கும் உணர்வு இருக்கிறது. இச்சை இருக்கிறது என்பதை உணர்ந்து அவளது இச்சை அடங்கும் வகையில் தாம்பத்தியத்தில் ஈடுபடுபவன் தான் மனைவியால் நேசிக்கப்படுவான்.

இல்லற வாழ்வில் மனைவியைத் திருப்தி செய்யும் கணவனின் எந்தக் குறையையும் மனைவி பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டாள். திருமணத்தின் பிரதான நோக்கமே உடற்பசியைப் போக்குவது தான். அந்தப் பசி இருசாராருக்கும் உண்டு. இருசாராரின் பசியும் அடங்க வேண்டும். இந்த அடிப்படை உண்மையை நீண்ட காலமாக ஆண் வர்க்கம் ஒப்புக் கொள்ளக் கூடத் தயாராக இல்லை. பெண்களுக்கு ஆன்மா உண்டா என்ற சர்ச்சைகளெல்லாம் நடந்துள்ளன. இன்றைக்கு ஆண்கள் இதை ஒப்புக் கொண்டாலும் நடைமுறைப்படுத்துவதில்லை. மனைவியரின் உணர்ச்சியை மதிப்பதில்லை.

மேற்கண்ட வசனம் இத்தகைய ஆண்களுக்குச் சிறந்த அறிவுரையைக் கூறுகிறது. மேலும் சில பெண்கள் கணவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்க மறுக்கின்றனர். ஆண்களுக்கு தாம்பத்திய உறவு தேவைப்படும் நேரத்தில் மனைவியர் ஒத்துழைக்க மறுப்பது தான் பெரும்பாலான ஆண்கள் விபச்சாரத்தை நோக்கிச் செல்வதற்கு முக்கியக் காரணமாக உள்ளது. பகல் நேரமாக இருந்தாலும் முக்கிய அலுவலில் ஈடுபட்டிருந்தாலும் பெண்கள் கணவர்களுடன் ஒத்துழைக்க வேண்டும். அத்தகைய பெண்களுக்கும் இந்த வசனத்தில் நல்ல அறிவுரை இருக்கிறது.

கணவன் அழைத்தால் அடுப்படியில் இருந்தாலும் மனைவி ஒத்துழைக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதைப் பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இருவரும் இந்த அறிவுரையைப் புரிந்து கொண்டால் குடும்பத்தில் பெரிய அளவில் பிரச்சனைகள் ஏற்படாது. இந்த வசனத்தை இன்னும் ஆழமாகச் சிந்திக்கும் போது இனிய இல்லறத்துக்குத் தேவையான மேலும் சில அறிவுரைகள் இதனுள் அடங்கியிருப்பதை உணரலாம்.

உதாரணம் காட்டுவதற்கு உலகில் எத்தனையோ பொருட்கள் இருக்க தம்பதிகளுக்கு உதாரணமாக இறைவன் ஆடையைக் குறிப்பிடுகிறான். இது ஏன் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். பல் வேறு நோக்கங்களுக்காக ஆடை அணியப்படுகிறது. அதில் பிரதான நோக்கம் மானத்தை மறைப்பது. ஆடை எவ்வாறு மானம் காக்கிறதோ அது போல் ஆண்கள் தம் மனைவியரின் மானம் காக்க வேண்டும். பெண்கள் தம் கணவர்களின் மானம் காக்க வேண்டும். ஆண் தன்னைப் பூரணமாக மனைவியிடம் ஒப்படைக்கிறான். ஒரு பெண் தன்னைக் கணவரிடம் முழுமையாக ஒப்படைக்கிறாள். முழு நம்பிக்கையுடன் ஒருவர் மற்றவரிடம் தன்னை ஒப்படைத்துள்ளனர்.

அந்த நிலையில் மனைவியுடன் உடலுறவு கொண்ட பின் அவளது அங்கங்கள் மற்றும் உணர்ச்சிகள் குறித்து நண்பர்களுடன் கருத்துப் பரிமாரிக் கொள்ளும் மானம் கெட்டதுகளும் ஆண்களில் உள்ளனர். அது போல் கணவனின் அந்தரங்கத்தைத் தோழிகளிடம் பகிர்ந்து கொள்ளும் மானம் கெட்ட பெண்களும் உள்ளனர். இத்தகையோரை மனிதர்களிலேயே மகா கெட்டவர்கள் என நபி (ஸல்) அவர்கள் இனம் காட்டியுள்ளனர். மேற்கண்ட வசனத்தில் இத்தகையோருக்குச் சிறந்த அறிவுரை உள்ளது.

உங்கள் கணவர்களிடம் – உங்கள் மனைவியரிடம் – உள்ள அந்தரங்க விஷயங்களை அடுத்தவரிடமிருந்து மறைக்கும் ஆடையாக ஒருவருக்கொருவர் திகழ வேண்டும். வெயில் மழை குளிர் போன்ற தொல்லைகளிலிருந்து காத்துக் கொள்வதற்காகவும் ஆடை அணியப்படுகிறது. மனைவிக்கு ஏற்படக்கூடிய துன்பம், மனக்கவலை, சிரமம் ஆகியவற்றில் கணவன் பங்கெடுத்து அதை நிக்கப்பாடுபட வேண்டும். அதுபோல கணவனுக்கு ஏற்பட்டுள்ள கஷ்டம், சிரமம் ஆகியவற்றை நிக்குவதற்கு மனைவி ஒத்துழைக்க வேண்டும். ஒருவருக்கொருவர் ஆடையாகத் திகழ வேண்டும் என்பதில் இந்தக் கருத்தும் அடங்கியுள்ளது.

ஆடை அணிவது ஒரு மனிதனின் மதிப்பை உயர்த்திக் காட்டுகிறது. அணிந்திருக்கும் ஆடையை வைத்தே மனிதன் மதிக்கப்படுகிறான். மதிக்கப்படுவதற்கேற்ப தனக்குப் பிடித்த ஆடைகளையே மனிதன் தேர்வு செய்கிறான். அதுபோல் தான், ஆண்கள் தம் துணைவியரைத் தேர்வு செய்யவும். பெண்கள் தம் துணைவர்களைத் தேர்வு செய்யவும் உரிமை இருக்க வேண்டும். அந்த உரிமையைப் பெண்களுக்கு வழங்க பெற்றோர் மறுக்கின்றனர்.

எந்த மாதிரியான உடை தன் மகளுக்குப் பிடிக்கிறது என்று மகளிடம் கேட்கக் கூடிய பெற்றோர், காலமெல்லாம் அவளுக்குத் துணையாக இருக்கக் கூடிய கணவன் குறித்து எந்த அபிப்பிராயத்தையும் கேட்பதில்லை. பெண்ணின் சம்மதம் பெறாமல் நடத்தப்படும் திருமணத்தை நபி (ஸல்) அவர்கள் ரத்து செய்து காட்டியுள்ளனர். பெண்ணின் சம்மதத்தைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியுத்தியுள்ளனர். குடும்ப வாழ்வுக்கு ஆடையை உவமானமாகக் கூறியிருப்பதிலிருந்து இந்த உண்மையையும் நாம் உணர முடியும். அணிகின்ற காரணத்தினால் ஆடைகள் அழுக்கடையும். அழுக்கடைந்த ஆடைகளை யாரும் அணிந்து கொண்டே இருப்பதில்லை. அதைத் துவைத்து தூய்மைப்படுத்தி அணிந்து கொள்கின்றனர்.

புத்தாடை ஆரம்பத்தில் நம்மைக் கவர்வது போல் புதுமணத்தம்பதிகள் ஒருவர் மற்றவரைக் கவர்வார்கள். நாளடைவில் குற்றம் குறைகள் கண்ணுக்குத் தெரிய ஆரம்பிக்கும். அவ்வாறு குற்றம் குறைகள் தென்படுமானால் ஒருவரிடமிருந்து மற்றவர் அதை நீக்க முயல வேண்டும். அதே நேரத்தில் அழுக்கை நீக்குகிறோம் என்ற பெயரில் ஆடையையே கிழித்து விடக்கூடாது. அந்த அறிவுரையும் இந்த சொற்றொடரில் அடங்கியுள்ளது.

ஆண்கள் குடிகாரர்களாக இருந்தாலும், கொலைகாரன் என்றாலும் உழைக்காத சோம்பேறி என்றாலும் பெரிய வியாதிக்காரன் என்றாலும் ஆண்மையே இல்லாதவன் என்றாலும் அவனை மணந்து கொண்டவள் அதைச் சகித்துக் கொள்ள வேண்டும். கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்றெல்லாம் பெண்களுக்கு அறிவுரை கூறப்படுகிறது. அந்த அறிவுரையை இவ்வசனம் அடியோடு நிராகரிக்கிறது.

எந்த நோக்கத்திற்காக ஆடை அணிகிறோமோ அந்த நோக்கத்தை ஆடை நிறைவேற்றாவிட்டால் அதைத் தூக்கி எறிந்து விட்டு வேறு ஆடையை மாற்றிக் கொள்கிறோம். கணவன் மனைவியிடம் கணவனாக நடக்காவிட்டாலும், அல்லது மனைவி கணவனிடம் மனைவியாக நடக்காவிட்டாலும் அவர்கள் அந்த உறவை முறித்து விட்டு ஏற்றதொரு துணையைத் தேடிக் கொள்ளலாம். இல்லற வாழ்வில் ஒருவருக்கொருவர் செய்ய வேண்டிய கடமைகள் உள்ளன. அந்தக் கடமைகளை யார் நிறைவேற்றத் தவறினாலும் உறவை முறித்துக் கொள்ள அனுமதியளிக்கும் ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. அவர்கள் உங்களுக்கு ஆடை! நீங்கள் அவர்களுக்கு ஆடை! என்பதைச் சிந்திக்கும் போது இதை உணர முடியும்.

மறுமணம் செய்யாத பெண் ஆடையற்றவளாக நிர்வாணமானவளாக இருக்கிறாள் என்பதையும் இவ்வசனம் அறிவுறுத்துகிறது. விதவைகளுக்கும் விவாகரத்துச் செய்யப்பட்டவளுக்கும் வாழ்க்கை அவசியம் என்பதை வற்புறுத்துகிறது. இவ்வசனத்தை இன்னும் ஆழமாகச் சிந்தித்தால் இனிய இல்லறத்துக்குத் தேவையான அனைத்து அறிவுரைகளும் அமைந்திருப்பதை உணரமுடியும்.

Leave a comment »

கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவி கோருகிறது தாருல் அதர். வெளிநாடுகளில் வசிக்கும் கொள்கைச் சகோதரர்களுக்கு தாருல் அதர் விடுக்கும் அறிவித்தல்.

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
அன்பின் கொள்கைச் சகோதரர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுழ்ழாஹி வபரகாதுஹு

“இவ் உலகக் கஷ்டங்களிலிருந்து ஒரு கஷ்டத்தை விட்டும் ஒரு விசுவாசியை யார் விடுவிக்கிறாரோ மறுமையின் கஷ்டங்களிலிருந்து ஒரு கஷ்டத்தை விட்டும் அல்லாஹ் விடுவிப்பன், வறுமையான ஒருவருக்கு உதவினால் இவ் உலகிலும், மறுமையிலும் அல்லாஹ் உதவுவான்.” (அறிவிப்பவர்: அபூஹுறைறா (ரழி), ஆதாரம்: முஸ்லிம்)

இலங்கையின் பல பகுதிகளிலும் தொடராக மழை பெய்து வருவதால் இங்கு வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப் பெருக்கின் காரணமாக இலங்கையின் பல பாகங்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளதுடன் அங்கிருக்கும் மக்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

குறிப்பாக கிழக்கு மாகாணம் முழுவதும் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு அவதியுறுகிறார்கள். தற்போது நமது ஊரிலும், அன்மைய பிரதேசங்களிலும் ஏற்பட்டுள்ள வெள்ள அணர்த்ததின் பாதிப்புகள் தொடர்பில் காத்தான்குடி இணைமனைகளினூடாக ஏனைய இணைய தளங்கள் மூலமும் அறிந்திருப்பீர்கள்.

பல சகோதரர்கள் தமது தொழில்களை இழந்தும், வீடுகளை விட்டும் வெளியேறியும் பல சிரமங்களை தொடர்ச்சியாக அனுபவித்து வருகின்றனர் என்றும் நமது பிரதேச வாவி பெருக்கெடுத்து குறிப்பிட்ட அளவுக்கு ஊருக்குள் வந்துள்ளதும் ஆற்று நீரின் அபாயம் காங்கேயனோடை கிராமத்தில் அதிகமாகவேயுள்ளதும் அங்கு வசிக்கும் ஆதிகமான மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து பாடசாலைகளிலும், பொது இடங்களிலும் பல சிரமங்களுக்கு மத்தியில் தங்களது காலத்தை களிக்கிறார்கள் என்பதும் நமதுள்ளங்ககளை நெகிழ வைக்கின்றது. தொடர்ந்து பெய்துகொண்டிருந்த மழை இவ்வாரம் முதல் குறைவடைந்துள்ளதுடன் வானத்தில் சூரியனையும் அவதானிக்கக்கூடியாக இருக்கிறது. அனைத்திற்கும் அழ்ழாஹ் போதுமானவன். அல்ஹம்துலில்லாஹ்.

அன்பின் சகோதரர்களே!
நாம் சிறப்பாக உண்ணுகிறோம்,சந்தோஷமாக இருக்கிறோம், நன்றாக உடுக்கிறோம், ஆரோக்கியமாக வாழ்கிறோம். ஆனால் நமது தொப்புல் கொடி உறவுகளான அந்த கிழக்கு வாழ் மக்கள் உண்ண உணவின்றி, தங்க இடமின்றி, உடுக்க ஆடையின்றி, குழந்தைகளுக்கு கொடுக்க பால் இன்றி கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அழ்ழாஹ்வின் உதவியால் உணவு வினியோகம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருப்பதுடன் உலர் உணவுப் பொருட்கள் வினியோகமும் பரவலாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இருப்பினும் தொடர்ந்து இப்பணிகளைச் செய்வதில் பல நிறுவனங்கள் பாரிய நிதி நெருக்கடிகளை எதிர் நோக்கியுள்ளது. சிறுவர்களுக்கான உணவுப் பொருட்கள் பெரும் தட்டுப்பாடாகவே தொடர்கின்றது. பால் மா, பிஸ்கட், நுளம்புச் சுருள் போன்ற பொருட்களின் தேவைப்பாடும் தொடர்ந்து காணப்படுவதுடன் அவ்வப்போது நமது பெண்மணிகளுக்கான சில அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடும் நிலவுகிறது, இந்நெருக்கடிகளுக்கு மத்தியிலும் எமது கொள்கைச் சகோதரர்கள் தம்மாலான பணிகளை தங்களால் முடிந்தவரை மேற்கொண்டு வருகின்றனர்.

எமது சகோதரர்களின் வாழ்வாதாரத்தினை இஸ்திரப் படுத்துவதிலும் குழந்தைகளை வைத்திருப்பதிலும், உணவுத் தேவைகளை சமாளிப்பதிலும் அவர்கள் எதிர் கொண்டுவரும் துன்பங்களில் நாமும் பங்குகொள்ளும் பொருட்டு தங்களின் உதவிகளைப் பெரிதும் எதிர்பார்க்கிறோம்.

மேலும் வெள்ள அனர்த்தத்திக்குப் பின் ஏற்படக்கூடிய நோய் நிவாரணத்துக்காகவும் அந்த மக்களுக்கு நாம் கண்டிப்பாக உதவிக் கரம் நீட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

அன்பின் சகோதரர்களே! செல்வந்தர்களே! ஜமாத் நிர்வாகிகளே! வெளிநாடு வாழ் சகோதரர்களே!

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உங்களால் எந்த உதவியை செய்ய முடியுமோ அவற்றை செய்து உதவுமாறு கொள்கைச் சகோதரர்களுக்கு தாருல் அதர் உங்களிடம் அன்பாகக் கேட்டுக் கொள்கிறது.

“ஆதமுடைய மகனே நீ (கொடு) செலவிடு! உனக்கு நான் செலவிடுகிறேன் (கொடுக்கிறேன்) என்று அல்லாஹ் சொல்வதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.”
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி),நூல்: புகாரீ (5352)

வசதி படைத்தவர்களாகிய நாம் வசதி இல்லாதவர்களுக்கு எந்த வகையில் உதவினாலும் அதன் மூலம் நாம் முழுமையான பலனை அனுபவிப்போம்.

“நல்ல வற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்கே. அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்.” (அல்குர்ஆன் 2 : 272)

நாம் வழங்கும் தர்மம் மறுமையில் அல்லாஹ்வால் பல மடங்கு உயர்த்தப்பட்டு மிகப் பெரிய கூலியாக வழங்கப்படும்.

“தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.” (அல்குர்ஆன் 2 : 261)

உலகம் முழுவதிலுமுள்ள முஸ்லிம் சகோதரர்கள் இத்தருனத்தில் பெருமதியான உங்கள் பிராத்தனைகளை அழ்ழாஹ்விடம் தொடர்ந்து கேட்குமாரு வேண்டிக்கொள்கிறோம். அதுவே துன்பத்திலிருக்கும் எமது சகோதரர்களுக்கு நாம் செய்யும் மிகப் பெரும் உதவியாக அமையும்.

தாருல் அதர் அத்தஅவிய்யா
(மத்ஹபுகள் சாராத அல்குர்ஆன் அஸ்ஸுன்னாஹ் அடிப்படையிலான பிரச்சார அமைப்பு)
த.பெ.இல 19, கப்பல் ஆலிம் வீதி,
புதிய காத்தான்குடி 02.
http://www.dharulathar.com
Tel: +94 – 65 – 2247900

Leave a comment »

பெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா?

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்..

16 வயது… பெண்களுக்கு ஒருவிதமான மனரீதியான ரசாயன மாற்றத்தை கொடுக்க கூடிய ரெண்டும் கெட்டான் வயது, நல்லதும் தெரியாது, கெட்டதும் புரியாது என்பார்கள்.. வெழுத்ததெல்லாம் பால் மின்னுவதெல்லாம் பொன் என்று நினைத்து
விடுகிறார்கள்.

இந்த வயதுடைய பள்ளிக்கு செல்லும் மாணவிகள் சிலர் விளக்கில் விழுந்த விட்டில் பூச்சிகளாய் காதல் வலையில் விழுந்து வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள். ஓரக்கண்ணால் பார்த்து… தயங்கி தயங்கி பேசி சத்தமில்லாமல் கடிதம் கொடுத்து… காதல் வளர்த்த காலம் போயே போச்சு.

நறுக்கு சுறுக்குன்னு ஒருபார்வை.. உங்க செல்போன் நம்பர் என்ன? என்று கேட்டு ஒரு சிரிப்பு.. அவ்வளவு தான் மறுநாளில் இருந்து அந்த செல்போன் நம்பருக்கு மணி கணக்கில் பேச்சு… 3 மாதம் கழித்து அந்த பையனுடன் ஓட்டம். இது தான் இன்றைய பள்ளி மாணவிகளின் தறிகெட்ட நிலை. இதில் பலர் முதல் திருமணம் செய்த வாலிபர்கள் என்பது வெளியே தெரியாத கொடுமை.

செல்போன் வசதி இல்லாத மாணவிகள் காதலனின் செல்போனுக்கு 1 ரூபாய் நாணய தொலைபேசியில் இருந்து தங்களது அழகை நீட்டி முழக்குகின்றனர். நேற்று இரவு டி.வி.யில் பார்த்த சினிமா காதல் காட்சிகள் முதல் சுவற்றில் ஒட்டப்பட்டிருக்கும் ஆபாச சுவரொட்டிகள் வரை அவர்களது பேச்சில் கலந்து மூச்சை சூடாக்குகிறது.

காதலன் என்ன சொன்னாலும் உண்மை என்று நம்பி நாமும் அது போல் செய்து பார்த்தால் என்ன என்ற ஒரு வித அசட்டு தைரியம் வந்து விடுகிறது. விளைவு வீட்டிலிருந்து ரன்…

கடந்த 2 மாதங்களில் மட்டும் பள்ளி மாணவிகள் காணாமல் போனதாக 50-க்கும் மேற்பட்ட புகார்கள் போலீசுக்கு வந்துள்ளது. இதில் வடபகுதி மற்ற பகுதிகளை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடிக்கிறது. வாரத்திற்கு குறைந்த பட்சம் 10 வழக்குகளாவது பதிவாகிறது. காணாமல் போன மாணவிகளை தேடி பார்த்தால் ஏதாவது ஒரு பையனுடைய வீட்டில், குடித்தனம் நடத்தும் “காதல்”
பட காட்சிதான்.

அவர்களை அழைத்து வந்தால் 14 வயது நிரம்பிய அந்தமாணவி பேசும் வசனங்கள் பெற்றோரை ரணமாக்குகிறது.. வாழ்ந்தால் அவரோடு, இல்லையேல் மண்ணோடு… என்ற சொல்லும் அந்த மாணவி சிறு பிள்ளையாய் இருக்கும் போது பார்த்து, பார்த்து
வளர்த்து… வெயில்படாமல், மழைபடாமல் கொஞ்சி வளர்த்த பெற்றோரின் பிஞ்சு மனது கனப்பதை காணமுடிகிறது. புண்ணியத்திற்கு போலீசார் அந்தப் பெண்ணிடம் வாழ்க்கையை எடுத்து கூறி நம்பிக்கையை ஏற்படுத்தி அந்தப்பெண்ணின் எதிர்காலம் கருதி அந்தப் பையனை எச்சரித்து அனுப்பி விடுகிறார்கள்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, செல்போனும்,
டி.வி.யில் காட்டப்படும் சினிமாவும்தான் சிறுமிகளின் மனதை கெடுக்கிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் அந்த சிறுமிகள் தங்களை யாராவது காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. விளைவு அந்த பெண்ணின் பின்னால் சுற்றும் ஊதாரி அவளது காதலனாகிறான். 14 முதல் 16 வயதில் காதலனுடன்
சுற்றும் நிலை ஏற்படுகிறது.

டி..வி.யில் வரும் சில நிகழ்ச்சிகளில் உங்கள் காதலர் பெயரை சொல்லுங்க என்பதும் நீங்கள் இன்னும் காதலிக்க ஆரம்பிக்கலையா? என்பது போலவும் உரையாடி, சிசுகளின் மனதில் நஞ்சை ஏற்றுகின்றனர். எம்.பி.பொண்ணு, ரவுடியை காதலிப்பது, பணக்கார பொண்ணு மெக்கானிக்குடன் ஓடுவது, வீட்டை விட்டு ஓடிய காதலர்கள் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு உயர்வது. போன்ற காட்சிகளை பார்த்து மாணவிகளின் மனம் அலைபாய ஆரம்பிக்கிறது…

பின்னர் தனது காதலனுடன் செல்போனிலும் தொலை பேசியிலும் மணிக்கணக்கில் காலணாவுக்கு உபயோகமில்லாத பேச்சை பேசி அரட்டை அடிப்பது ஒருகட்டத்தில் வீட்டிற்கு தெரிய வந்தால் அவனுடன் ஓடிவிடுவது இதுதான் தற்போது அதிகம் நடக்கிறது. இதில் நல்ல குடும்பத்து பெண்கள் விதிவிலக்கு! போலீஸ் நிலையத்திற்கு வாரம் 15 புகார்களும், குறைந்த பட்சம் 10 வழக்குகளாவது பதிவு செய்யப்படுகிறது.

இதை தடுக்க பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கையை தினந்தோறும் கண்காணிக்க வேண்டும் அடிக்கடி செல்போன் பேச அனுமதிக்க கூடாது. தனியாகவோ, தோழிகளுடனோ அதிகமாக வெளியில் செல்ல அனுமதிக்க கூடாது. திடீரென புது புது ஆடைகளை அணிவதையும் முகத்தை பியூட்டிபார்லர் சென்று அழகு படுத்துவதையும் செய்யும் பெண்கள் நிச்சயம் காதல் வலையில் விழுந்திருக்கும் அபாயம் உண்டு, பெற்றோர் உஷாராக இருக்க வேண்டும்.

வயதுக்கு வந்த பெண்களை டி.வி.யில் காதல் காட்சிகளை பார்க்க
அனுமதிக்காதீர்கள். டி.வி. தொடர்களை பார்ப்பதை தவிர்த்தாலும் கூடுதல் நன்மை கிடைக்கும். தனியாக பள்ளி செல்லும் பெண்ணின் நடவடிக்கையை தயவு செய்து வாரம் ஒரு முறையாவது கண்காணியுங்கள். படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பதை அடிக்கடி நினைவு படுத்துங்கள். காதலனுடன் ஓடி போய் சீரழிந்த பெண்களின் நிலமையை எடுத்துக்கூறுங்கள். அது அவர்களுக்கு ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தும்…

Comments (2) »

காத்தான்குடியில் கசாப்பான உண்மை – II (வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்)

ஆஹா!!! இதோ பார்! சூப்பர் ஸ்டில்! புள்ளாப் போடப்பா என்று ஒருவர் சொல்கின்றார். மற்றொருவர் ரீவைண்ட் பண்ணப்பா! சூப்பர்ர்ர்ரா… அவன் கொடுத்து வச்சவன்டா என்கிறார். ஏ… இது யார்ரா? இது நம்ம அஸ்மிட wife டா. அது யார்ரா? ஆள் அசத்தலா இருக்கே? இது நம்ம காதர் தங்கச்சி!!!

தங்களுக்கு முன்னால் ஓடிக் கொண்டிருக்கும் வீடியோ காட்சிகளுடன் மேற்கண்ட வீடியோ கமென்டரி உரையாடல்களும் கலகலப்பாக ஓடிக் கொண்டிருக்கும். இவை எல்லாம் எங்கு நடக்கின்றன என்கிறீர்களா? சாதி சமய பேதமற்று எம்மதமும் சம்மதம் என்ற கோட்பாட்டின் படி சர்வ சமயத்தவரும் சங்கமமாகி தங்கியிருக்கும் Gulf நாட்டின் அறைகளில் தான்.

(Gulf நாடு என்றவுடன் அங்கு பணிபுரியும் எல்லோருமே இப்படித் தான் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. மார்க்கப் பணிகளுக்காகவும், மார்க்கப் பிரச்சாரத்தைக் கேட்பதற்காகவும் மட்டுமே தங்கள் விடுமுறை நாட்களை அர்ப்பணிக்கும் சகோதரர்களும் கட்டாரில் இருக்கின்றார்கள். இங்கு நாம் குறிப்பிடும் சங்கதிகளும் அகட்டாரில் நடக்காமல் இல்லை. வீடியோவில் பெண்கள் போஸ் கொடுப்பதால் ஏற்படும் விளைவுகளைச் சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்)

ஆக அந்த அறையே ஒரு சிறிய வீடியோ திரையரங்காக மாறி நிற்கும். இந்த வீடியோ படப்பிடிப்பு எங்கு நிகழ்ந்தவை? எல்லாம் நம்ம ஊரில் நம்ம வீட்டுத் திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ தான்.

காத்தான்குடியில் நம்ம வீட்டில் கல்யாணம் என்றதும் வீடு களைகட்டி நிற்கின்றது. நம்ம ஊரில் வீடியோ இல்லாத திருமணமா? என்று கேட்கும் அளவுக்கு வீடியோ கலாச்சாரமும் அநாச்சாரமும் கொடி கட்டிப் பறக்கின்றது.

வீதியில் உலாவரும் வீடியோ கேமரா!!!
கல்யாணம் வீட்டில் நடந்தாலும் முதன்முத¬ல் காட்சியாவது முச்சந்தியில் நிற்கும் பள்ளிவாசல் அல்லது தர்ஹா மற்றும் ஊரின் புகழைச் சொல்கின்ற கலாச்சார மண்டபம் தான். இதன் பின் காலையில் கல்யாண வீட்டுக்குள் கேமரா நுழைந்து டீ காப்பி சப்ளை, டிபன், மணமகன் மணமகள் அலங்காரம் என்று மணமகனும் மணமகளும் மணவறையில் நுழைகின்ற வரை கேமரா பின் தொடர்ந்து சென்று ஒரு வழியாக்கி விட்டுத் தான் வெளியேறும்.

மணமகன் இல்லத்தி¬ருந்து துவங்கி, வீதி வீதியாகச் சென்று மணமகள் இல்லத்திற்கு அல்லது மண்டபத்திற்குச் சென்று திருமண ஒப்பந்தம் முடியும் வரையிலும் அத்தனையும் படமாக்கப்படுகின்றன.

குறிப்பாக இந்தக் கேமரா, பெண்கள் விருந்து பரிமாறும் போது, அங்க அசைவுகள் அனைத்தையும் கிளிக் செய்யத் தவறுவதில்லை. அதாவது அங்கிங்கு அசைந்து, வந்த விருந்தாளிகளை விழுந்தடித்துக் கவனிக்கும் பெண்களை கேமராமேன் குறி தவறாது பார்த்துக் கொண்டிருக்கின்றான். பற்றாக்குறைக்கு அவனுக்குப் பக்க துணையாக லைட் பிடிக்க இன்னொரு எடுபிடியாள் வேறு!

வேலை செய்கின்ற பெண்களுக்கு நிர்ப்பந்தமாக ஆடை விலகல் நடைபெறத் தான் செய்யும். ஆனால் இவையெல்லாம் ஒளிப்பதிவாகிக் கொண்டிருக்கின்றன என்பது தான் வேதனைக்குரிய விஷயமாகும்.

திருமணத்தில் கலந்து கொள்ளும் பெண்கள் முதல் கேமராமேன்களின் பார்வைகளுக்கு செழிக்க செழிக்க விருந்தாகின்றனர்.

அதன் பின்னர் துவக்கத்தில் நாம் கூறியது போல் அறைகளில் பலரும் உட்கார்ந்து கிரிக்கெட் கமென்டரியைப் போன்ற வர்ணனையுடன் ரசித்துப் பார்க்கும் ஆடவர்களின் பார்வைக்கு இப்பெண்கள் விருந்தாகின்றனர். இவ்வாறு பார்வைகளில் படரவும் தொடரவும் இந்த வீடியோப் பதிவுகள் வகை செய்கின்றன.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக திருமணம் செய்து கொள்ளப் போகும் மணமகன் கூட பெண்ணைப் பார்த்திருக்க மாட்டான். அதற்கு முன்பாகவே கேமராமேன் மணப்பெண்ணை ரசித்துப் பார்த்து விடுகின்றான். பவுடர் பூசி, நகைகள் அணிந்து, வண்ண ஆடைகளுடன் முழு நிலவைப் போல் அமர வைக்கப்பட்டிருக்கும் இந்த மணப்பெண்ணை நோக்கித் தான் கேமரா நிலைகுத்தி நிற்கின்றது.

இப்படி மணப்பெண் முதற்கொண்டு, நமது மனைவி, மக்கள், சகோதரிகள், கொழுந்தியாக்கள் என்று அனைவர் மீதும் பாயும் கேமராவைப் போன்றே இந்த கேமராமேனின் பார்வையும் வளைத்து நிற்கின்றது. இதில் மிகமிக வேதனைக்குரிய விஷயமும் வெட்கக்கேடான விஷயமும் என்னவென்றால் இந்த வீடியோக்களுக்கு நம் வீட்டுப் பெண்கள் கூச்ச நாச்சமின்றி போஸ் கொடுப்பது தான்.

“ஆரம்ப கால முஹாஜிர் பெண்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! ”(நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக!) தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்” என்ற (24:31) வசனத்தை அல்லாஹ் அருளிய போது, அவர்கள் தங்கள் கீழாடை(யின் ஒரு பகுதி) யைக் கிழித்து அதைத் துப்பட்டா ஆக்கிக் கொண்டார்கள்.” (அறிவிப்பவர்: ஆயிஷா (ர¬லி), நூல்: புகாரி 4758)

இதே கருத்தைக் கொண்ட செய்தி அபூதாவூதில் 3577வது ஹதீஸாகப் பதிவாகியுள்ளது. அதில் ஆயிஷா (ர¬லி) அவர்கள் அன்சாரிப் பெண்களைப் பாராட்டுவதாக இடம் பெற்றுள்ளது.

தன்னை மறைத்துக் கொள்வதில் முன்னணியில் நின்ற அந்த நபித்தோழியர் எங்கே? இன்று வீடியோவுக்குப் போஸ் கொடுக்கும் இந்தப் பெண்கள் எங்கே?

ஒரு காலத்தில் ஒரு பெண் சினிமாவில் காட்சியளிக்கின்றாள் என்றால் சமூகம் அவளைக் காறித் துப்பியது. ஆனால் இன்றோ நடிகைகளுக்கெல்லாம் சமூக அந்தஸ்து வழங்கப்பட்டது போல் ஒரு போலித் தோற்றம் ஏற்படுத்தப் பட்டுவிட்டது. இப்படி ஒரு போலித் தோற்றம் இருந்தாலும் மற்ற சமுதாய மக்களிடத்தில் கூட, ஒரு பெண் பல பேர் முன்னிலையில் நேரிலோ அல்லது வீடியோவிலோ காட்சியளிப்பது வெறுப்பிற்குரிய காரியமாகவே கருதப்படுகின்றது. இவர்களிடத்திலேயே வெட்கம் தன் வேலையைக் காட்டும் போது ஒரு முஸ்லிமிடத்தில் இந்த வெட்க உணர்வு எப்படி இருக்க வேண்டும்?

“ஈமான் (இறை நம்பிக்கை) அறுபதுக்கும் மேற்பட்ட கிளையாக உள்ளது. வெட்கம் என்பது ஈமானின் ஒரு கிளையாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.”
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர¬லி), நூல்: புகாரி 9)

இந்த ஹதீஸின் அடிப்படையில் ஓர் இறைநம்பிக்கை கொண்ட பெண் அடுத்தவர் முன் காட்சியளிக்க முன்வர முடியுமா? இப்படிப்பட்ட பெண்களுக்கு நபி (ஸல்) அவர்கள் சுவனத்தின் வாடை கூட நுகர முடியாது என்று எச்சரிக்கை செய்கின்றார்கள்.

“நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு சாராரை (இன்னும்) நான் கண்டதில்லை. ஒரு சாரார், அவர்களிடம் மாட்டு வால்களைப் போன்ற சாட்டைகள் இருக்கும். அவற்றைக் கொண்டு மக்களை அடித்துக் கொண்டிருப்பர். இன்னொரு சாரார் பெண்கள் ஆவர். இவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். தளுக்கு நடை போட்டு ஆண்களை வளைத்துப் போடுவார்கள். அவர்களின் தலைகள் ஒட்டகத்தின் திமில்களைப் போன்று (கொண்டை போடப்பட்டு) இருக்கும். எவ்வளவோ தொலைவுக்கு சொர்க்கத்தின் நறுமணம் வீசும். ஆனால் இவர்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள்.” (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர¬லி), நூல்: முஸ்¬லிம் 3971)

பெண்கள் ஆண்களின் முன்னால் காட்சிப் பொருளாகத் தோன்றுவதன் மூலம் சுவனத்தில் நுழையும் பாக்கியத்தை இழந்து விடக் கூடாது. இப்படி வீடியோவில் பதிவாகி காட்சிப் பொருளாகும் பெண்கள் ஒரு தடவை மட்டும் பாவம் செய்யவில்லை. அந்த வீடியோ கேஸட்டுகள் எப்போதெல்லாம் ஆண்களால் பார்க்கப்படுகின்றதோ அப்போதெல்லாம் பாவம் பதியப்படும் நிலையை அடைகின்றார்கள்.

ரோஷம் இழந்த ஆண்கள்!!!
இஸ்லாம் மனிதர்களுக்கு ரோஷ உணர்வை ஊட்டுகின்றது. பின்வரும் ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் இதைத் தெளிவாக உணர்த்துகின்றார்கள்.

”என் மனைவியுடன் ஓர் ஆண் இருக்கக் கண்டால் வாளின் முனையாலேயே அவனை நான் வெட்டுவேன்” என்று ஸஅத் பின் உபாதா (ர¬லி) அவர்கள் கூறினார்கள். இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களை எட்டிய போது, ”ஸஅதின் ரோஷத்தைக் கண்டு நீங்கள் வியப்படைகின்றீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவரை விட அதிக ரோஷமுள்ளவன். அல்லாஹ் என்னை விடவும் அதிக ரோஷமுள்ளவன். அல்லாஹ் தன் ரோஷத்தின் காரணத்தால் தான் வெளிப்படையான மற்றும் மறைவான மானக்கேடான செயல்கள் அனைத்தையும் தடை செய்து விட்டான். (திருந்துவதற்கு வாய்ப்பளித்து) விட்டுப்பிடிப்பதை மிகவும் விரும்புபவர் அல்லாஹ்வை விட வேறெவரும் இல்லை. அதனால் தான் நற்செய்தி சொல்பவர்களையும் எச்சரிக்கை செய்பவர்களையும் அல்லாஹ் அனுப்பி வைத்தான். அல்லாஹ்வை விட மிகவும் புகழை விரும்புபவர்கள் வேறெவருமில்லை. அதனால் தான் அல்லாஹ் சொர்க்கத்தை அளிப்பதாக வாக்களித்துள்ளான்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஅபா (ர¬லி), நூல்: புகாரி 6846, 7416)

ஒரு மனிதனுக்கு ரோஷம் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த ஹதீஸ் தெளிவாக உணர்த்துகின்றது. ஆனால் இந்த விஷயத்தில் ஆண்கள் ரோஷமிழந்து நிற்கின்றார்கள். அதனால் தான் மணம் முடிக்கப் போகும் தானே சரியாகப் பார்த்திராத நிலையில் ஒரு கேமராக்காரன் பார்த்து அவளது அழகை ரசிப்பதற்கு அனுமதிக்கின்றான். இதுபோன்று தனது வீட்டுப் பெண்கள் அனைவரையும் காட்சிப் பொருளாக ஆக்கி, அதை அடுத்தவர்களின் பார்வைகளுக்கு விருந்தாகப் படைக்கின்றான்.

இது இவனது ரோஷ உணர்வு முற்றிலும் உலர்ந்து போய் செத்து விட்டது என்பதையே காட்டுகின்றது. இதில் ஏகத்துவவாதி என்று கூறுவோர் கூட விதிவிலக்காக இல்லை. அவர்களது வீட்டிலும் திருமண உரை என்ற பெயரில் வீடியோ எடுக்கப்பட்டு, அதில் குடும்பப் பெண்களை எல்லாம் அரங்கேற்றும் அவலத்தை நடத்தி விடுகின்றார்கள்.

நம் ஊர் திருமணங்களில் வீடியோ கலாச்சாரம், ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் இஸ்லாமிய சமூகத்தைத் தொற்றி நிற்கும் ஒரு கொடிய தொற்று நோயாகும். அந்நிய ஆடவர்களின் பார்வைகளில் நம்முடைய பெண்கள் விருந்தாகும் வீடியோ கலாச்சாரத்தையும் இதை அடிப்படையாகக் கொண்ட திருமணங்களையும் நம் ஊர் ஏகத்துவவாதிகள் புறக்கணிக்க வேண்டும். இத்தகைய கலாச்சார சீரழிவை விட்டும் நமது சமுதாயத்தைக் காக்க வேண்டும்.

போட்டோக்கள்!!!
கல்யாண வீட்டில் வீடியோ எடுப்பது சமீபத்தில் வந்த புதிய கலாச்சாரம் என்றால் போட்டோ எடுத்தல் என்பது புரையோடிப் போன ஒரு பழக்கமாக நீண்ட காலமாக நமது சமுதாயத்தில் உள்ளது.

இங்கும் மணமகளை கேமராக்காரன் முதன்முத¬ல் பார்த்து தனது கேமராவைப் போலவே கண் சிமிட்டிக் கொள்கின்றான். வீடியோ கேஸட்டாவது பிளேயரில் போட்டால் தான் படம் தெரியும். ஆனால் இந்த போட்டோக்களோ ஆல்பங்களில் சேகரிக்கப்பட்டு அவரவர் தங்கியிருக்கும் அறைகளிலுள்ள மேஜைகளில் பார்வைக்கு வைக்கப்படுகின்றது.

போட்டோக்கள் விஷயத்தில் பாஸ்போர்ட், அடையாள அட்டை, டிரைவிங் லைசன்ஸ் போன்ற அவசியத் தேவைகளுக்காகவும், ஆதாரங்களுக்காகவும் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் இவையன்றி அநாவசியமாக போட்டோ எடுத்து அதைப் பாதுகாத்து வைப்பதன் மூலம் நாம் பாவமான காரியம் செய்தவர்களாகின்றோம். இத்தகைய உருவப்படங்கள் வீட்டில் இருக்கையில் மலக்குகள் வருவது கிடையாது.

“நாயோ உருவப்படமோ உள்ள வீட்டில் வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (அறிவிப்பவர்: அபூதல்ஹா (ர¬லி), நூல்: புகாரி 3322)

“ஆயிஷா (ர¬லி) வீட்டுக்கு நபி (ஸல்) அவர்கள் வருகின்ற போது உருவப்படங்களைக் கண்டு உள்ளே பிரவேசிக்க மறுக்கின்றார்கள்” என்பதை புகாரி 3226 ஹதீஸில் காண முடிகின்றது.

எனவே நமது வீட்டில் அருளைச் சுமந்து வரும் மலக்குகள் உள்ளே வருவதற்குத் தடையாக அமைகின்ற இந்த உருவப் படங்களை விட்டும் நாம் தவிர்ந்திருக்க வேண்டும்.

“இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்து அவனது வரம்புகளை மீறுபவனை நரகில் நுழையச் செய்வான். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவனுக்கு இழிவு தரும் வேதனை உண்டு.” (அல்குர்ஆன் 4:13,14)

அல்லாஹ்வின் இந்த வரம்புகளை மீறினால் இப்படி மீறுபவர்கள் நிரந்தர நரகத்தை அடைவார்கள் என்று கூறுகின்றான்.

திருமணங்களில் வீடியோ / போடோவின் கொடுமை பற்றி மக்களிடம் சொல்லும் போது, மற்ற மற்ற மக்களை விட்டு விடுவோம். ஏகத்துவவாதிகளே இதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஏகத்துவவாதிகள் எல்லோரையும் இப்படிச் சொல்லவில்லை. நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல் சொந்த வீட்டில் நடைபெறும் திருமணத்தைப் புறக்கணித்து பட்டினி கிடப்பவர்களும் இருக்கின்றார்கள்.

இன்னும் சொல்லப் போனால் இந்தத் தீமைகளையெல்லாம் கருத்தில் கொண்டு வீடியோ, போடோ மட்டுமல்ல, பெண் வீட்டில் தாங்களே விரும்பித் தரும் அன்பளிப்பைக் கூட வாங்க மாட்டேன்; பொட்டு நகை கூட போடாமல் வந்தால் தான் திருமணம் முடிப்பேன் என்று சபதம் செய்த ஏகத்துவவாதிகளும் இருக்கத் தான் செய்கின்றார்கள்.

ஆனால் அதே சமயம், இதையெல்லாம் பெரிய தீமையாக நினைக்காமல் திருமணங்களில் வீடியோ,போடோவில் போய் கலந்து கொண்டு, அதை நியாயப்படுத்துபவர்களும் ஏகத்துவவாதிகள் என்ற பெயரில் இருக்கத் தான் செய்கின்றார்கள்.

இது போன்ற திருமணங்கள் நம் நன்மைகளைப் பறிக்கும் அளவுக்குக் கொண்டு செல்கின்றது. இவைகள் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவதாகும். அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவது நரகத்திற்குக் கொண்டு செல்கின்றது. இப்படி நரகத்தைப் பெற்றுத் தரும் இந்த ஆனாச்சாரங்கள் நம் திருமணங்களில் இடம்பெறலாமா? அவ்வாறு இடம்பெரும் திருமணங்களில் போய் கலந்து கொள்ளலாமா? முடிவெடுங்கள்! இது போன்ற திருமணங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, வீடியோ, போடோ மற்றும் ஆனாச்சாரங்கள் இடம்பெறும் திருமணங்களில் கலந்து கொள்ளாமல் முற்றிலும் புறக்கணியுங்கள்!

இது மட்டுமின்றி நாம் ஏற்கனவே குறிப்பிட்டபடி திருமண வீடியோவினால் ஏற்படும் அனைத்து தீமைகளும் திருமண போட்டோக்களாலும் ஏற்படும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே இது போன்ற தீமைகளை விட்டும் நாம் விலகியிருப்போமாக!

“ஒரு சுன்னாவினை உயிர் வாழ வைப்பவன் ஒரு சமுதாயத்தினை வாழ வைத்தவன் போன்றாவான்.”

Comments (2) »